ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்து 'தலைமைத்துவம்' (Leadership) ஆகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் வலுவான பெண் முன்னோடி மாதிரிகள் அவசியம் என்பதையே இது வலியுறுத்துகிறது.
அழகு தேற்றாத்தீவு..
25 April 2024
இலங்கையில் ICT துறையிலும் அரசியல் தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு
23 April 2024
கடன் மறுசீரமைப்புடன் சேர்த்து அரசியல் மறுசீரமைப்பும் அவசியம்.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்க அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அறிக்கைகளை இரண்டரை வருடங்களாகக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அந்தத் தொகை இறையாண்மைப் பத்திரங்களுக்குச் செலுத்தப்பட வேண்டும். இருதரப்புக் கடன்களுடன் சேர்த்து, நிலுவையில் உள்ள கடனின் மொத்தத் தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
21 April 2024
நாட்டில் சிறைச்சாலைகள் இல்லாதொழிக்க என்னவழி?
யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக சிறைக்குச் செல்கிறார். ஆனால் நம் நாட்டில் குற்றம் சுமத்தப்படாமல் தவறு செய்பவர்கள் எண்ணற்றவர்கள். அரசியல்வாதிகளால் இன்று நமது நாடு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது;. நமது நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளையடித்தார்கள். நாடு பெற்ற வெளிநாட்டு திட்டங்களில் இருந்து கமிஷன் பெற்றனர். கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பாலம்ஈ பாதைகள் மற்றும் மற்றும் மதகுகளை கூட சுரண்டினார்கள்.
18 April 2024
பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை.
இன்றைய உலகில், சமூகத்தின் வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் முக்கியத்துவம் எப்போதையும் விட அதிகமாக உள்ளது. வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அவை அறிவு படைப்பு, திறன் வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு, சமூக நீதிக்கான போராட்டம் மற்றும் கலாச்சார வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முக்கிய சக்திகளாகும்.
எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்தின் அடிப்படை நோக்கமும் வெறும் தகவல்களைப் பரப்புவது மட்டுமல்ல, ஒன்றை ஆய்ந்து கேள்விகேட்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதும், நடைமுறையில் உள்ள சித்தாந்தங்களை சவால் செய்வதும், சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் ஆகும். ஆயினும்கூட, நாம் சுற்றிப் பார்க்கும்போது, ஆராய்ச்சி மற்றும் கற்றுக்கொள்ளுதலின் திசையை சந்தைப்படுத்தும் ஒனற்hக மாறி வருவதனைக் காண்கிறோம், இதனால் நமது பல்கலைக்கழகங்களின் உண்மையான நோக்கத்தினையே சிதைக்கிறோம்.
17 April 2024
அரசாங்கம் எதற்குத் தேவை
பாலித்த தேவரப்பெரும அரசியலில் ஒரு எடுத்துக்காட்டு
12 April 2024
நுகர்வோருக்கு எச்சரிக்கை! 90% உணவுப் பொருட்கள் பாவனைக்கு தகுதியற்றவை
அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட நாம் தினமும் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனங்களை கலப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், வெண்ணெய் கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்குகளில் வெண்ணெய் தவிர முட்டைகள் எதுவும் இல்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
09 April 2024
எதை நாம் புத்தாண்டில் விட்டுவிடுகின்றோம்?
கடந்துவந்த நமது வாழ்க்கையின் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களைத் திரும்பிப் பார்ப்பது, கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட்டதா என்று சிந்திப்பது, அதுபோல இன்னும் முன்னே உள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுக்குத் தயாராக ஆசிகளைப் பெறுவதையும்; புத்தாண்டின் சாராம்சம் என்று அழைக்கலாம்.
05 April 2024
களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுமா?
முன்னேற்றப் பாதையிலே மனசு வச்சி முழுமூச்சா அதற்காக தினம் உழசை;சி பாடுபடுற விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற நிலையில் கிழக்கு விவசாயிகள் நாதியற்றுக்கிடப்பதனை ஜீரணிக்க முடியவில்லை. யாரங்கே யாரங்கே இதற்கொல்லாம் வரமாட்டார்கள். நாம் இன்று பிரயோசனமற்றுக்கிடக்கும் முற்றுப்பெற்ற களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் பற்றிப்பார்க்கப்போகின்றோம்.
தலைவர்களாக..... கணேசமூர்தி வந்தாரு! காதர்மஸ்தான் வந்தாரு!, அமல்சேர் வந்தாரு! அமீர்அலி வந்தாரு! அதிகாரிகளாக... கருணாகரன் வந்தாரு! கலாவதி வந்தாரு! ஒண்ணும் திறக்க முடியல
சாராய வார் திறக்கிறண்டா வேணாம்னடாலும் ஓடி ஓடி திறக்கறாணுகள் ஆனா வாழ்வழிக்கும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்த பரிபூரணமா முடிச்சிம் இத்தன அக்கப்போர் எதற்கு? ஏதோ உள்ளே இருக்குப்போல வாங்க பார்க்கலாம்!