ADS 468x60

17 February 2010

கொம்புச்சந்தி கலையகம்


என்னங்க ஆச்சரியமாப் பாக்கிறீங்க! நம்மட மாவட்டத்தில அதுவும் நம்மட ஊரில பாடல் ஒன்னு பதிவு செய்த வேளை திருவாளர் சண் இன்பத்தார் பாடுகிறார்..











இது தான் நம்மட கொம்புச்சந்தி கலையகம் ... சிறிய வசதியைக்கொண்டு பெரிய பெரிய படைப்புகளை செய்ய இது உதவி வருகிறது...

காளி கோயில் கும்பாபிசேக பாடல் மற்றும் பட இறுவட்டுகள்... மற்றும் எமது கிராமத்து அருங்கலைகள், இதெல்லாம் தாண்டி பல படைப்புகள் வெளியிட்ட வண்ணம் இந்த கொம்புச்சந்தி கலையகம் இருக்கிறது...எனது இணைய இணைப்பில் காணப்படுகிறது.

எனது மாவட்ட முத்தான சொத்துகளை எடுத்துக்காட்டும் கண்ணாடி...
எனது வாசல் மல்லிகையாய் மணம் பரப்பும் பூந்த்தோட்டம்...

இங்க பாருங்க அன்பர் இன்பத்தார் பாடலுக்கு முன்னர் தன்னை ஒருமுகப்படுத்துகிறார்...

ம்ம்ம்ம் தனது ஒளிப்பதிவை படைத்துவிட்ட திருப்பதியில் எனது ஆருயிர் நண்பர் சுரேசருடன் பால் தேநீர் அருத்துகின்றனர்

நண்பர் கூட சளைத்தவர் அல்ல...அந்த காலத்தில கடுமையான சோக பாடல்களை எல்லாம் நல்லா வாசிக்க கூடியவர் என்று என் சக நண்பர்கள் எல்லாரும் கிண்டலடிப்பார்

இது தான் எங்க ஆரம்பகால கலையாக தோற்றம் ...


அடியேனும் சிறிது பாடுவேன் ஆனால் வெடிவெடியாய் கொண்டு போடுவானுகள் அங்க கம்பசில படிக்கக்குள்ள...









இங்கதான் நிறைய நேரத்த பயனுள்ளதாக களிப்பம்... பின்னேரம் ஆகினால் இன்பராஜன், விமலானந்தராஜன், ஈழவேந்தன், சண் அங்கிள், கதிரவேற்பிள்ளை எல்லோரும் வருவார்கள் பிறகென்ன ஒருவர் இராகத்தை  எடுப்பார் நான் பாடலை எழுதுவேன், இன்பத்தார் பாடலை சமைப்பார் அன்பர் விமல் மற்றது ஈழவேந்தன் ஆகியோர் இசை வழங்க திரும்ப திரும்ப படிச்சி ஒரு வளி பண்ணி விடுவார்கள்....



இன்பனின் பாட்டில் ஊரில எல்லோருக்கும் ஒரு தனிப்பிரியம்..தரமா படிச்சுடுவாரு.... ம்ம்ம் இந்த கலைஞர்கள்  இந்த மாவட்டத்தின் பெரிய சொத்துக்கள்..அனால் கழுதைக்கு தெரிவதில்லை கற்பூர வாசனை.... எங்கட நாட்டில வானொலி டிவிய துறந்தா வேரனாட்டாநிண்ட  கூத்துதான் வெட்கக்கேடாய் இருக்குங்கோ .....

கிட்டத்தில நம்மட யாழ் பல்கலைகக்கழக இசை மானி வாகீசன் தம்பி ஒரு அழகான பாடலை வெளியிட்டுத்தந்தார் அதை உங்களுக்காக விரைவில் தருவேன்..அது இப்படி தொடங்குகிறது..
கொம்புமுறி ஆடுகிறோம்
கரகம் கும்மி பாடுகிறோம்
தேத்தாத்தீவு அழகான களரியம்மா..
தெருவெல்லாம் கமத்தின் வாடையம்மா.... என்று போகுதுங்க....
அவரு படிக்கும்போது எமது கலையகத்தில் கிளிக் பண்ணிய பதிவுகளில் இன்பத்தார் மற்றும் விமலானந்தர் ஆகியோர் இசை கூட்டுவதை பார்க்கலாம்...


அப்பா நம்மடவங்க பண்ணிறத பாருங்க, பாராட்டுங்க, கேளுங்க, அதுவே பெரிய உயிர்ப்பிச்சை எங்கட குற்றுயிர் தமிழ் கலாசாரத்துக்கு ........

0 comments:

Post a Comment