ADS 468x60

21 February 2010

இனியும் வேண்டாம்!

யார் இந்த
முள்ளில் கரம் பற்றும்
அல்லி மொட்டு!
கம்பிக் கூட்டுக்குள்
வெம்பி நிற்கும்
சின்னக் குயிலின்
பறவை விடு தூது இது...


ஏய் காக்கயே
உனக்கு தெரியுமா
என் அம்மா இருகுமிடம்
வட்டர் தருகிறேன்
வாய்திறந்து சொல்வாயா!


பச்சைக் கிளியே
பார்காமல் போகிறியே
பல இடம் சுத்துகிறாய்,
என் தம்பியை கண்டாயா?
தனியாக நிக்கிறேனே!..


வண்ணாத்து பூச்சே
வழியில் செல்கிறாய்
என் அப்பாவை கண்டாயா
நான் அவரிடம் போகனுமே!


நீங்களெல்லாம்
கனியும் தேனும் உண்டு
காட்டில் கூடுகட்டி
பாட்டுப் படித்து வாழ்கிறீர்
குஞ்சை ஈந்து
குடும்பமாய் இரக்கிறீர்...


என்னையும் உங்களிடம்
கொண்டு செல்வீர்களா!
இந்த மனிதம் செத்த
நாட்டுக்குள்
மறுபடியும் வாழும்
துரதிஸ்டம்
இனியும் என்கு வேண்டாம்..

0 comments:

Post a Comment