மட்டு நகரின் தெற்கே கடல் வளமும், நிலவளமும் கொழிக்கும் தேனூர் என்றழைக்கப்படும் தேத்தாத்தீவில் கலையருவி பாய்ந்தோடுவது சிறப்பு. கலாலயா கலைக்களகம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முதல் இவர்கள் தான் எங்கள் கீரோக்கள், நடிகர் திலகங்கள் எல்லாமே. சடங்கு, திருவிழா மற்றும் வருடப்பிறப்புகள் என்று வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டமுங்க...இவர்கள் நாடகத்தின் நாடிபிடித்தவர்கள், வில்லிசையில் நாண் பிடித்தவர்கள். நவரசம் பொங்க இவற்றை படைத்த படைப்பாளிகளில் கந்தையா -நவரட்ணம் ஒரு பெரிய முன்னோடி..பெயர்பெற்ற இந்த கலைக்களகத்தின் மூத்த கலைஞரான நரன் என்று செல்லமாக அழைக்கப்படம் நாராயணம் அவர்களின் வயிறு குலுங்க வைக்கும் பாடலை எங்கள் கொம்புச்சந்தி கலையகம் படைத்து உங்களுக்கு சமர்ப்பிக்கிறது... இனி வருங்காலங்களில் ஆக்கபூர்வமான படைப்புகளை தர உங்கள் ஆலோசனைகளை வேண்டி நிற்கிறோம்.
0 comments:
Post a Comment