நாய் தின்னாக் காசி
பூகம்பத்துக்கே நில்லாத ஊடு
ஓட்டிப்போக காரு
உடுக்கப் பட்டு
சூட்டுக்கு ஏசி-ஆனால்
சொந்தமெல்லாம் தூசி
மாப்பிள்ளைய விலைபேசும்
மனிதம் செத்தவர்கள்
சேற்றில் கால் வைக்காத
சோத்து மாடுகள்
கண்களில் ஈரமில்லாத
கல்நென்சக்காரர்கள்
கல்நென்சக்காரர்கள்
உடலையும் உயிரையும்
பங்குபோடும்
நாகரிகம் நலிந்தவர்கள் -தாய்
மொழிமறந்து
வழிகெட்டு போனவர்கள்
பாசமே இல்லாத
வேசதாரிகள்.........
இவங்கதான் இப்ப பெரியவங்கலாம்
குச்சிக் குடில்
தின்னக்கஞ்சி அதிலும்
உண்ணக்குடுப்பவன்
தன்னைப்போல
பிரரைப்பாப்பவன்
மிச்சமில்லாது ஒழைப்பவன்
அச்சமில்லாது வாழுபவன்
துண்டு கட்டியவன்
வெந்து வேலை செய்பவன்
கோடி கொடுத்தாலும்
போலியாகாதவன்
ஒத்தக்காலானாலும்
சொந்த சோறு தின்னுபவன்
செத்துப்போனாலும்
ஒத்திகாக சாகிறவன்
நம்ப வாழுபவன்
நம்பியே கெடுபவன்
இவங்கெல்லாம் இப்ப
சிறியவங்க தாம்பா
.................................................
0 comments:
Post a Comment