ADS 468x60

09 March 2010

புதிர் கணக்கு

கண்டு பிடியுங்கள்-இந்த
கணக்கை
தேர்தலில் களமாடி
சூது விளையாட
கோடி கோடியாய் கொட்டி
வேடிக்கை பார்க்கும் இவர்கள்
தேச அபிமானிகளாம்
இல்லை இல்லை
அவர்கள் தேச அவமானிகள்.......

மடி நிறைய கடன் வேண்டும்
அரச கூட்டம்- அது
மக்களின் கைகளில் விழுந்ததோ
பெரிய வாட்டம்.
அன்னியன் கையில்- நாட்டை
அடகு வைக்கும் திட்டம்
மக்களுக்கு கொடுத்ததோ
கடன்காரன் பட்டம்....

வேதனையில் உள்ளோரெல்லாம்
வேண்டுவதோ
சமாதான நாட்டம்-ஆனால்
அரசியல்வாதிகள்
போடுகின்ற ஆட்டம்
அங்கொண்டும் இங்கொண்டும்
தேர்தல் கூட்டம்
அதில் அகப்பட்ட மக்கள்
படுவதெல்லாம் அடி, வெடி...

தேர்தலுக்காய் போனது கோடி கோடி
நாட்டில் மக்களுக்கு வந்ததோ பேரிடி
நாம் கூட்டியதெல்லாம் வேதனை- நாட்டில்
காட்டியதெல்லாம் சோதனை

ஆண்டுக்கொருமுறை வந்து வந்து
ஆண்டவரெல்லாம் தந்ததென்ன???
மீண்டும் வருமரசி புத்தாண்டில்
பொருளினை பெருக்குமோ!
நாட்டினைப் பிரிக்குமோ!
மக்களை கழிக்குமோ!- இல்லை
ஒற்றுமை கூட்டுமோ!
புதிர் கணக்கே எங்களுக்கு
புரிய வைப்பார் யாருமுண்டோ????

0 comments:

Post a Comment