ADS 468x60

05 August 2010

வாழ்துச்சூடி...






















உன்னை கண்டு பிடித்ததால்
நானும் ஒரு கொலம்பஸ் உலகில்!
சோடிக்க உன்னை வார்த்தைகள் இல்லை
வாடிக்கையாக பேசிறேன்....
கைமணக்கும் மண்டுர் பலாப்பழமே!


நெய் மணக்கும் எருவில் வத்தாளைக் கிழங்கே!
களுதாவளை கொழுந்து வெத்தலையே!
மட்டுநகர் வாவி உன் அழகான மேனி;
வாகரை கொம்புத்தேனோ -உன்
வாய் இனிக்கும் வார்த்தை!


பட்டிப்பளை பசும்பாலோ –உன்
பால் வழியும் முகம்தானும்
பக்கம் வந்து நீ சிரித்தால்
பாடுமீன் ஓசை வரும்!
அலையடிக்கும் கிழக்குக் கரை- எனை
அலையவைக்கும் உன்கொலுசு.


தாலாட்டு வசந்தன் அம்மானை எல்லாம்
ஓன்றாக கேட்குதடி- நீ
உதிர்தும்; வார்த்தையிலே...
படுவான் கரை சூரியன்போல் - நீ
கொடுத்து சிவந்த கைகள்
படுபாவி எனை அனைத்து
பாராமல் போகுதடி..ம்ம்ம்ம்


நான் புவியரசாய் இருந்திருந்தால்
உனக்கு அரியாசனம் தந்திருப்பேன்
வெறும்
கவியரசனாய் இருந்ததால்
கவியாரம் மட்டும் சூட்டுகிறேன்.