ADS 468x60

25 January 2011

அலட்டாகிய ஆறுமுகத்தான் குடியிருப்பு...

இலங்கையில் நதிகள் மிகையாகப்பாயும் நாடு என்ற பெருமை மட்டக்களப்புக்கே சாரும்... அந்த வகையில் அண்மைய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 14 பிரதேச செயலகப்பிரிவுகளில் ஏறாவூர்பபற்றும் ஒன்றாகும். இங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஆற்றங்கரை ஓரமாக மயிலம்பாவெளியில் இருந்து வாழைச்சேனை நோக்கி வருகின்ற வளியில் இருக்கிறது. இங்கு வாழுகின்ற அனேகம் மக்கள் மீன்பிடி, கமம் மற்றும் கூலித்தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது...

 இக்குக்கிராம மக்கள் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு வெந்து நொந்து இருக்கின்றமை அறியக்கிடக்கிறது. நேற்றைய தினம் அதாவது 24.01.2011 அன்று பெரியதொரு ஆர்ப்பாட்டப்பேரணியினை தங்கள் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டனர்..

பெண்கள் அதில் வெந்து நொந்து கோபாவேசத்தோடு நின்றதை காணக்கூடியதாக இருந்தது.. பதாதைகளில் ஆறுமுகத்தான் குடியிருப்பின் பாராமுகம் ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஒரு கணம் வீதியில் சென்ற வாகனங்கள் இருமருங்கும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இவர்கள் இந்நிலமைக்கு றோட்டில் எம் இனத்தினை கொண்டு விடும் அளவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா??? அல்லது இவர்கள் வேலையில்லாமலா றோட்டில் இந்த அற்ப்ப சொற்ப்ப நிவாரணங்களுக்காக துவம்சம் பண்ணுகிறார்கள் என்ற கேள்வி என் மனத்திரையில் இழையோடியது, 

பாவம் இம்மக்கள்... எல்லோரும் இன்நாட்டு மன்னர்கள் என்பது சும்மாவா???

0 comments:

Post a Comment