ADS 468x60

18 February 2011

கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு பூத்துப் போச்சுடா..


வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா
கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு
பூத்துப் போச்சுடா
தம்பி பூத்துப் போச்சுடா...

ஓடி ஓடி படிச்சிப் படிச்சி
மூளையெல்லாம் தேஞ்சிபோச்சி
படிச்சிருந்தா மத்தவன் பாத்து
பகிடி பண்ணுறான் -நம்ம
வேல தேட அனுபவம் கேட்டு
மகிடி ஊதிறான்- தம்பி
பணத்தை கேட்கிறான்?

அரச தொழிலை நம்பி நம்பி
அரை வயது போனதிப்போ
புருசலட்சணம் இதுவா என்றும்
கேட்கிறானுங்கோ –நீ
றோட்டில் இருந்து வேலைகேட்பது
தொழிலுக்காகாது –தம்பி
தொழிலுக்காகாது...

வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா
கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு
பூத்துப் போச்சுடா
தம்பி பூத்துப் போச்சுடா...

0 comments:

Post a Comment