ADS 468x60

11 February 2011

கண்களும் கவிபாடுமே...

அதைரியம்...படபடப்பு....
இடையிடை மின் தாக்கம்...
கூச்சம்..... குழுகுழுப்பு....
இடையில்
நெஞ்சை அள்ளும்
பஞ்சாவியும்
நீழ் கூந்தல் வாசனையும்
ஆயிரம் சிருங்காரத்துடன்- நான்
அருகிருந்தும்
பார்க்க முடியாமல்...

பேருந்துப் பயணத்தில்
நாமிருவரும்....
கிலோ மீறறர்களைத் தாண்டியும்
கேள்வி கேட்க்க முடியாமல்..
உந்தி உதைத்த மனதின்
வாக்கில் மெதுவாகத் திரும்பி..
'நீங்க நாளைக்கும் வருவீங்களா' என்றேன்...

அவளின் கண்கள் மட்டும்..
மெதுவாக மூடித் திறந்து
ஆமாம் என்றது......
வாடிக்கையாக ...
அன்றுதான் விளங்கியது
கண்களும் கவிபாடுமோ! என்று....
.

4 comments:

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி கருன், ம.தி.சுதா சகோதரங்களே... உங்கள் வரவு என் பதிவுகளுடன் நல்வரவாக அமையட்டும்...

பிரியா ரமணன் said...

நெஞ்சை அள்ளும்
பஞ்சாவியும்
நீழ் கூந்தல் வாசனையும்

ithayellam ipo kaanamudiyithillayee anna!
kavithai super!

Post a Comment