ADS 468x60

18 February 2011

உலகில் உயர உயரப் போகும் வேலையின்மை விரக்தி


கூறுவார்கள் காய்ச்சலும் தலையிடியும் வந்தால்தான் தெரியும் என்று ஆமாம் அனுபவித்த இளம் பட்டதாரிகளிடம் காணப்படும் மன விரக்தி எங்கே போய் முடியும் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது. இன்னும் ஒன்னு கூறுவார்கள் ' ஒரு மனிதனுக்கு அவன் வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஒன்று முயற்சி மற்றது அதிஸ்ட்டம்' இரண்டும் தேவை என்று. ஆனால் இரண்டுமே சரிவரமல் எத்தனையோ உள்ளங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன. சரி இப்போ விதிக்கு சலுட் அடிக்கும் நேரம் வந்திருக்கு அவர்களுக்கு...

நம்ம மட்டுமில்லை உலகிலயே 2009இல் 212 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் இருப்பது 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 34 மில்லியன் தொகையினால் அதிகரித்துள்ளது. இது அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் நேர்ந்துள்ளது என சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகம் (ILO) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தவிரவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகம் என்பன 2010 இற்கு பின் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறியிருந்தமை பலித்துவிட்டது. 2010 இல் மட்டும் 3 மில்லியன் வேலையற்ற மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இந்த மாற்றம் பிராந்தியங்கள், நாடுகளை பொறுத்து வேறுபட்டு நிற்கிறது என்றும் அவை குறிப்பிடுகின்றன. இந்த வேலையற்ற சமுகத்தின் சமுகப்பாதுகாப்பு, வேலையற்றோருக்கான நன்மைகள், என்பன கோடிக்கணக்கான மக்களுக்கு கிடைக்கப் பெறாமலேயே இருக்கின்றமை துரதிஸ்ட்டமானதே.

இங்கே ஒப்பீட்டளவிலான வேலையற்றோரின் சில தரவுகளை தருகிறேன். ஆசியாவில் குறிப்பிடத்தக்க நாடுகளின் தரவுகள் இங்கே...


ஐரோப்பிய நாடுகளில் வேலையற்றோரின் விகிதங்களை இங்கே காணலாம்.
சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகத்தின் பணிப்பாளர் சோமாவியா குறிப்பிடுகையில் அரசியல்வாதிகள் வேலைவாய்ப்பை வளங்குவதில் தயக்கம் காட்டுவதாகம், இதற்கு பதிலாக வங்கித்துறைகள், தனியார் கம்பனிகள் அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டமை அரசின் தொழில் உருவாக்கத்தில் அண்மைக்காலமாக நிலவி வருகின்ற தொய்வினை படம் பிடித்துக் காட்டுகின்றதல்லவா?

இவரின் அறிக்கைப்படி இந்வேலையற்ற இளைஞ்ஞர் யுவதிகளிடையே இலகுவில் பாதிக்கக்கூடிய நலிவுற்றவர்களின் தொகை 2008 காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2009 இல் இது 1.5 பில்லியனாக அதிகரிததுள்ளது. இது மொத்த உலகலாவிய வேலையற்றோரில் அரைப்பங்காகும் என அதிர்சி தகவலை அந்நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். 

மேலும் கூறுகையில் உலகில் வேலை செய்தும் 633 மில்லியன்; குடும்பத்தினர் நாளாந்தம் 1.25 டொலர் வருமானத்தினைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றும் இவர்கள் மேலதிகமாக உள்ள 215 மில்லியன் ஊழியர்கள் 2009  இல் வறுமைக்கோட்டில் கால் பதித்து வறியவர்களாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை, எமது எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எப்படியாவது வேலை கிடைத்து விட்டதென்றால், அவர்கள் தங்களது சம்பளத்தினைப் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில் பராபட்சமாக நடத்தப்படுகின்றனர். வேலை செய்யும் இடத்தில் 100 மில்லியனுக்கும் மோலான மக்கள் இன்று பராபட்சம் காரணமாக ஒதுக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.. இது வெறுமனே ஒரு வன்முறை மாத்திரமல்ல அதற்கும் மேல் அவர்களது உரிமை மீறலாகும் என்றும் இவ்வமையத்தினால் கூறப்படுகின்றது.

கிட்டத்தட்ட 12.3 மில்லியன் மக்கள் கட்டாயத்தின் பேரில் வேலை வாங்கப்படுகின்றனர். இவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கான வேதனங்கள் வழங்கப்படுவதும் இல்லை வேறு சலுகைகளும் இல்லை. அப்பாடா தப்பிச்சோம் நாம என்பதற்க்கில்லை ஏனெனில் நம்ம ஆசியாவில் இது அதிகமாக காணப்படுகிறது.

ஆகவே வேலை தேடி தேடி கிடைத்து விட்டாலும் நிறையவே தடை தாண்ட வேண்டி இருக்கிறது. ஏதோ வேலை என்பது குதிரைக் கொம்புபோல் அரிதாகும் அளவுக்கு நாடுகளின் பொருளாதார நெருக்கடி, அரசியல் இறுக்கம், பாரபட்சம், இயற்கை அனர்த்தம், வளப்பற்றாக்குறை, சனத்தொகை அதிகரிப்பு மற்றும் இன்னோரன்ன காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள், தனியார் கம்பனிகள் மற்றும் வங்கித்துறையினர் கைதேர்ந்த அறிவாளிகளின் துணையுடன் தொழில் உருவாக்கங்களை செம்மையாக உன்மையாக செய்ய மனசி வைத்தால் முடியும் இதைத்தான் சர்வதேச ஊழியர்களுக்கான நிறுவகமும் சுட்டிக்காட்டியுள்ளது.

4 comments:

ம.தி.சுதா said...

நல்லதொரு கருத்துக்கணிப்புடன் கூடிய அலசல்... காலப் போக்கில் இது இன்னும் அதிகரிக்கும் போல இருக்கு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

S.T.Seelan (S.Thanigaseelan) said...

ஆமாம் சகோதரனே.... மிகமோசமாக அதிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று ILO தெரிவிக்கிறது.

john danushan said...

நல்ல பதிவு

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி நண்பரே....

Post a Comment