ADS 468x60

19 February 2011

பாக்கு நீரிணையில் மீன் சண்டை...


இலங்கை மற்றும் இந்தியாவின் தமிழ் நாட்டுப்பகுதியில் கிரிக்கட் செய்திகளை விட பாக்கு நீரிணையை படகுகள் கடக்கும் செய்திகள் தான் கெட்லைன். இவற்றைப் பார்க்கும்போது நாடகம் ஒன்றை பார்ப்பது போன்றுதான் இருக்கிறது. எதுக்காகவோ, யாராலயோ யாரோ நடத்துகின்ற நாடகக் காட்சியில் அப்பாவிப் பொது மீனவர்கள் பந்தாடப்படுவதும், அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து உலை மூட்டும் இந்த மீனவர்களுக்கு கடல்தான் ஆபத்து என்றால் மனிதனாலுமா என்று ஆத்திரமாய் இருக்கிறது. 

இன்று இரு நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் விநோதம் என்ன என்றால் இரு நாட்டவரும் தமிழர்கள். செத்தாலும் பொளச்சாலும் தமிழன்தானே! ம்ம் 21 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட அதே போன்று 136 இந்திய மீனவர்கள் இலங்கை காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மக்களிடையே அரசியல்வாதிகள் தனவந்தர்களின் சூழ்சியால்தான் இவை இடம்பெறுவதாக பரவலாக குசுகுசுக்கப்படுகிறது. ஆகவே இந்த அபாயகரமான அரசியல் வியாபாரிகளை பகுத்தறிந்துகொள்வதும் அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்வதும் இன்று அவசியமானது.

மீன்பிடி வர்த்தகத்தின் உலகச் சந்தை வியாபாரிகள் இலங்கை இந்திய மீனவர்களை தமது பொருளாதாய ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவர்கள். கூலிக்கு வேலை செய்யும் மற்றும் வறிய மீனவர்களின் நாளாந்தத் உழைப்பு மூலதனத்தை சுரண்டும் இவர்கள் கடற்பரப்பை சந்தைக்கு உவந்த பிரதேசமாக மாற்ற முனையும் நடவடிக்கைக்கு இந்திய இலங்கை அரசுகள் துணை போகின்றன. தமிழக மீனவர்களின் கொலைகள் ஊடாகப் பய உணர்வை ஏற்படுத்தி அவர்களை அரச பின்பலம் கொண்ட பெரு முதலாளிகளிடம் சரணடையச் செய்கின்றது. ஏன ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது(http://inioru.com/).

நிற்க நமது ஆசிய நாடுகளை கைப்பொம்மையாக வைத்து நமது வளங்கள் மறைமுகமாகச் சுரண்டப்படுகின்றது, என்பது தெரியாமல் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அதன் வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் உற்ப்பத்தியை நிர்ணயிக்கும் காரணிகளாக நிலம், ஊழியம், மூலதனம் மற்றும் முயற்சியாண்மை நான்கும் முக்கியமானது. இதில் நிலம் இயற்கை வளமாகும் ஏனையவை மனித வளமெனக் கொள்ளப்படுகின்றது. ஆனால் அதிகரித்து வருகின்ற சனத்தொகைப் பெருக்கம், அருகிவரும் இயற்கை வளம் என்பனவற்றுக்கேற்ப்ப ஆசியாவின் மக்கள் இசற்றை கையாளவில்லை. அவற்றை அதிகளவாக நுகரவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். 

குறிப்பாக இயற்கை வளங்களுள் கடல் மீன்பிடி வளம் ஒரு பொதுவான எல்லோரதும் சொத்து ஆனால் இப்போது அது சில அதிகார வர்க்கத்தினரால் வெளிநாட்டு வல்லாதிக்கத்தின் தொழில் நுட்பத்தோடு அடியோடு அழித்தொழிக்கும் திட்டத்தின் பின்னணியில்தான் இந்த மீன்பிடிச் சண்டை நாடகம் நடக்கிறது.

கடலில் அந்தந்த நாட்டு எல்லைக்குள் யாரும் மீன்பிடிக்கலாம், எவளவும் பிடிக்கலாம், எப்படியும் பிடிக்கலாம் என்பதனால்தான் டைனமோ மற்றும் றோளர் போன்ற சாதனங்களின் துணையுடன் அவற்றை அள்ளிச் செல்லுகின்றனர், ஆனால் அப்பாவி ஏழை மீனவர்களின் நிலமையை இந்த பெரிய முதலைகள் நினைத்துப் பார்க்கத்தவறிவிடுகின்றனர்.

நலப் பொருளியலாளர்கள் இந்த அரசியலுக்கு அப்பால் இவ்வாறான சச்சரவுகள் இல்லாமல் பண்ணுவதற்க்கும், இயற்கை வளத்தின் சம நிலையைப் பேணுவதனூடாக ஒரு பேண்தகு அபிவிருத்தியை அந்த நாட்டு மக்களுக்கு அடையப் பெற மூன்று வகையான அணுகு முறையினைச் சொல்லுகின்றனர்.

1. மீன் பிடிப்பதற்க்கான இடங்களை வரையறை செய்தல்.
குறிப்பாக அரசாங்கங்கம் மீனவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் மீன்பிடிக்கும் எல்லைகளை நிர்ணயித்துக் கொடுப்பது.
குறித்த காலப்பகுதியில் மட்டும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அனுமதியளித்தல்.
ஏவ்வளவு மீன்பிடிப்பதற்க்கான வலை ஒருவர் வைத்திருக்க வேண்டும் என்பதை வரையறை செய்யதல்.
போன்றவற்றின் ஊடாக இந்த இயற்கை வளத்தை பராமரிப்பதோடு இந்த எல்லைச் சண்டையையும் தவிர்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

2. வரிகளை விதித்தல்
இந்த மீன்பிடித் தொழிலினால் வருகின்ற வெளிவாரி விளைவுகளையும் எல்லை மாறாட்டங்களையும் களைவதற்கு இந்த மீனவர் வரி விதிப்பு அவசியமானது. இது அவர்கள் கடல் வளத்தின் எதிர்காலத்துக்கு செய்யும் சிதைவுகளுக்கான சன்மானமாகப் பயன்படுத்தப்படவேண்டும். இது அவர்களின் நியாயமான மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் காரணியாகும்.

3. சொத்து மீதான உரிமையை உருவாக்குதல்.
இது சொல்லப்பட்டாலும் நடைமுறையில் கொண்டுவருவது கடினமானதே. குறிப்பாக ஆறுகள் வாவிகளில் மீன்பிடிப்பவர்களுக்கு அந்த அந்த குடும்பங்கள் அவர்களுக்கு வகுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளயே மீன்பிடிக்க வேணும் என்கின்ற ஒரு உரிமையை உருவாக்கலாம். அதுபோல் கடல்களிலும் நாட்டுக்கு நாடு வரை செய்யப்பட்டிருக்கும் எல்லைகள் சம்மந்தமான வரையறை மீனவர்களிடையேயும் தெழிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இம்மூன்று அணுகு முறையூடாகவும், எதிர்காலத்தில் வளங்கள் நிலைத்து நின்று அது அடுத்த சந்ததிக்கும், இன்றய மீனவ சந்ததிக்கும் பயனுறுதி வாய்ந்த ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை என்றே கூறலாம்.

2 comments:

சாமக்கோடங்கி said...

நல்ல பகிர்வு நண்பரே..

வாழ்த்துக்கள்..

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி நண்பரே...உங்கள் வாழ்துகளுக்கு...

Post a Comment