ADS 468x60

20 February 2011

வேரறுந்து கிடக்கும் வெல்லாவெளிப் பிரதேசம்....

உலகலாவிய ரீதியில் புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்ப்பட்டு வெள்ள அனர்த்தம், புயல், காட்டுத் தீ என்றும் எல் நிலா மற்றும் லா நிலா என்றெல்லாம் வானிலை புதுசு புதுசாக கலியுகத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கிறது.

இது இலங்கையின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல உலகிலேயே அவுஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களிலும் அதன் பொருளாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் அந்நாட்டு சமுகம் எல்லாத்தினையும் ஆட்டங்காண வைத்துக் கொண்டிருக்கிறது. 'ஸ்ரேன்' அறிக்கையின் படி உலகிலேயே தற்போது அதிகமாக நலிவுறும் தன்மைக்குள் அகப்பட்டிருக்கும் இந்நிலை சுமார் 50 தொடக்கம் 100 வருடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு கரையோரம் வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப்பிரயாணத் துறையினர் எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

ஆளானப்பட்ட அவுஸ்த்திரேலியாவுக்கே இத்தனை அச்சுறுத்தல் என்றால் அல்ப்ப இலங்கை என்னவாகும் என்று கடந்த வெள்ளம் பாடம் சொல்லி இருக்கிறது. இலங்கையின் அண்மைய வெள்ளத்தினில் பாதிக்கப்பட்ட பதின்மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமே பட்டுத் தவித்திருக்கிறது. அதில் உள்ள பதின்நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் முற்றாகச் சேதமைந்த போதும், தற்போது அனைத்து பணியாளர்களது கண்ணும் கோலம் கெட்டுக்கிடக்கும் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பால் திரும்பி இருக்கிறது. இங்கு பொங்கிய வெள்ளத்தினில் 46,360 பேர் அதாவது 12,760 குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அனேகமான கிராமங்கள் ஒருதொடர்பும் இல்லாமல் இருந்தமை இந்த பிரதேசத்தின் வெள்ள அனர்த்தத்துக்கான நலிவுறுந்தன்மையை புட்டுக் காட்டுகின்றது அல்லவா?????? குறிப்பாக ஆனைகட்டியவெளி, மலையுர்கட்டு, சின்னவத்தை, மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம், ராணமடு, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, கண்ணபுரம், நெல்லிக்காடு, காக்காச்சிவட்டை, விளாந்தோட்டம், நவகிரிநர் போன்ற 21 கிராமங்கள் நீரில் மூழ்கிக் கிடந்தது.

குறிப்பாக இங்கு வாழ்கின்ற மக்கள் சேனைப்பயிர் செய்கை, வேளான்மைச் செய்கை, மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மற்றும் ஆடு மாடு, கோழி வளர்த்தல் அத்துடன் வீட்டுத்தோட்டம் என்பனவற்றினையே கிடைத்த வளங்களைக் கொண்டு சிறப்பான பயன்களைப் பெற்றுக்கொண்டு வந்தனர். கணக்கீட்டின்படி 10,214 குடும்பங்கள் அதாவது 36,197 மக்கள் தங்களது ஜீவனோபாயத்தினை இழந்துள்ளனர். 22467 ஏக்கர் விவசாயம் அடிக்கடி அடித்து நாசமாக்கிய வெள்ளத்தில் களுவுண்டு போயுள்ளது, கழுவுண்டு போனது அவர்களின் வயல் நிலங்கள் மட்டுமல்ல அவர்களது அன்றாட வாழ்க்கையும் சேர்த்துத்தான். அவர்கள் வானம் பொழியும் மழை மாரியினையும், குளங்களில் கிடைக்கும் நீர் வளத்தினையும் நம்பியே விவசாயத்தினில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவையெல்லாம் வெள்ளத்தின் வீறாப்பில் பள்ளத்தில் இழுத்தெறியப்பட்டுள்ளன. இந்த உடைக்கப்பட்ட குளங்களின் விபரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் தரப்பட்டடுள்ளது.
(தகவல் பிரதேச செயலகம் போ.பற்று)
இம்மக்கள் வயற் செய்கைக்கு அப்பால் மேட்டுநிலப் பயிர் செய்கைபண்ணி வேறு பிரதேச செயலகப்பகுதிகளுக்கு சந்தைப்படுத்தும் ஏற்றுமதி வியாhபரத்திலும் ஈடுபட்டு வந்தனர். அதில் அதிக லாபம் ஈட்டி வந்தனர். பழுகாமம், மண்டுர் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றுக்க தனி மவுசே இருந்தது. இதற்க்கு மேலாக பயறு, குரக்கன், இறுங்கு, சோளம், எள்ளு என்பன போன்ற இன்னோரன்ன தானியப் பயிர்செய்கையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தன்னிறைவு ஏற்ப்படுத்திய பெருமை இவர்களுக்கே சாரும். இவ்வாறு இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட 1665 விவசாயிகள் முற்றாக இப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துடன் 178 பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களது 41 ஏக்கர் பழச்செய்கை மண்ணோடு மண்ணாகி விட்டதை பிரதேச செயலக அறிக்கை பறை சாற்றுகின்றது. அதே போன்று 3310 வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.
(உடைந்து கிடக்கும் மண்டுர் பாலம்)
அபிவிருத்தி திட்டமிடலாளர்கள் அனர்த்தம் பற்றிய கரிசனையினை அபிவிருத்தி நடவடிக்கையில் கொள்ளத்  தவறிவிடுகின்றனர் என்பதற்கு வெல்லாவெளிப் பிரதேசம் சிறந்த உதாரணமாகும். இங்கு நான்கு பாலங்கள் (மண்டுர் பாலம், காக்காச்சிவட்டை மருதங்கடவைப் பாலம், ஆணைகட்டியவெளி கோஸ்வே, திக்கோடை கோஸ்வே) முற்றாக வெள்ளத்தில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. அதுபோன்று 124 சிறிய பெரிய அளவிலான வீதிகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன இவை வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபை, மற்றும் நீர்ப்பாசன சபையினரின் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அளவிட முடியாத இளப்பினை இந்த இரண்டு தசாப்த கால யுத்த காயம் ஆறமுன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இந்த வெள்ளம் அடிமேல் அடித்து அந்த மக்களை மண்ணுக்குள் புகுத்தியுள்ளது. அவர்களை கட்டிக்காப்பதில் அல்லும் பகலும் சிரமம் பாராமல் தோழோடு தோழ்கொடுத்து உதவிய பெருமை அப்பிரதேச செயலாளர் உதயசிறி அவர்களையே சாரவேணும். இருப்பினும் இவர்களது சக்கிக்குமேல் இந்த இழப்பை உடன் நிவர்த்தி செய்ய முடியாது. இது நீண்ட காலத்தில் மீழ் கட்டமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்க்கு ஏனைய துறைசார்ந்த திணைக்களங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. மாத்திரமல்லாமல் நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்தி சார்ந்து, சமுகம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளியல் நலன் கருதிய முன்னெடுப்புகள் தான் ஆரோக்கியமான பாதுகாப்பினை வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் என்பது எனது கருத்தாகும். ஆகவே இம்மக்களின் அவல நிலை தொடரவிடாமல் உதவிபுரிய இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்பது எனது அவாவாகும்.
தகவலுக்கு நன்றி பிரதேச செயலர் போரதீவுப் பற்று...

0 comments:

Post a Comment