ADS 468x60

06 February 2011

அதிசயம் ஆனால் உண்மை..

கலியுகத்தில் இருக்கிறோம் அல்லவா, யானையின் தும்பிக்கையால் நீர் இறைப்பதுபோல் மழைபொழியுமாம், இப்படியெல்லாம் நம்ம பழயவங்க சந்திக்கு சந்திப பந்தி வைத்து பேசுதுகள்.. அது என்னவோ உன்மைதான் என்பதுபோல் நடந்து கொண்டிருக்கிறது நம்ம நாட்டில மட்டுமல்ல உலகமெங்குமே.

நம்ம நாட்டில ஆகாயத்தில் ஒரு அழகான குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள்ளயே இரண்டாம் தடவையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் கொரவப்பொத்தான என்ற இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான வெல் 212 கெலிக்கொப்டரில் நான்கு கற்ப்பினித்தாய்மார்கள் அவசர அவசரமாக எடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது, இடை நடுவில் அதிசயக் குழந்தை ஒன்று அதில் ஒரு முஸ்லிம் தாய் பிரசவித்துள்ளார்.

விமானப்படைப் போச்சாளர் ஜனக நாணயக்கார கூறுகையில் தாயும் சேயும் எதவித பாதிப்பும் இல்லாமல் நலத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதுதான் விமானப்படையில் வரலாற்றில் நடந்த பிரசவ நிகழ்வென்று வியந்தார். இது தவிர அநாதரவாக இப்பகுதியில் வெள்ளத்தில் அகப்பட்டுக்கிடந்த 20 மக்களையும் இவர்கள் மீட்டெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பெய்துவரும் அடைமழையில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஆங்காங்கே பாதை மறிபட்ட நிலையில் தத்தளித்து வருகின்றனர். அவர்கள் மேட்டுப்பகுதிகளிலும், மரங்களிலும் தஞ்சமடைந்து அவதியுற்று வருகின்றனர் என்றும், அவர்களைக் காப்பாற்ற இலங்கை விமானப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குறுப் கப்டன் ஜனக நாணயக்கார கூறுகையில், இலங்கை விமானப் படையினரின் 7 கெலிபக்கப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இன்று 22இ000 கி.கிறாம் உணவுகள் இலங்கை எங்கும் வெள்ளத்தில் அகப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

3 comments:

S.T.Seelan (S.Thanigaseelan) said...

Thank you Nelson, Thanks

சாமக்கோடங்கி said...

நல்ல விஷயமே... நன்றி

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி நண்பரே....

Post a Comment