ADS 468x60

10 February 2011

காதல் ஒரு கண்ணாடிக் குவளை..

இந்த நாட்களில் எந்நப் பூக்கடையைப் பார்த்தாலும் சன நெருசலாக இருக்கும், அதற்கு தனி மவுச இருக்கும். பூக்கடைக்காரன்கள் மூன்று மாதத்தில் உழைக்கிற உழைப்பை மூன்றே மாதத்தில் உழைத்து விடுகிறார்கள், பார்க்கலாம் அடுத்து உலகத்திலே இளம் பெண்கள் அனேகமாக விரும்பும் பண்டம் சொக்கலேற் அது அதி உன்னதமான நினைவுப் பொருளாக இருக்கிறது. 

இன்னும் ஒன்னு பாத்தீங்கண்ணா ரெஸ்டோரண்டுகளில் ஒரே நெருசல் அதற்கு அநியாயமாக பணத்தைச் செலவளித்து உன்னை நானும், என்னை நீயும் என கண்கள் கவ்விக் கொண்டு இருக்கும், ஆனால் பக்கத்தில் இதே போன்று 20 காதல் ஜோடிகள் இருந்து இதே வேலையைச் செய்தாலும் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்களாம். ஏன் தெரியுமா இது காதலர் வாரம், காதலர் தினம் என்றால் இப்படித்தான உலகம் எங்கும் நடக்கிறது. ஆதனால் தான் சொன்னார்கள் 'உலகில் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத ஒரே மயக்கம் காதல் மயக்கம் மட்டும்தான்' என்று...

அது சரி காதலுக்கு அழகு தேவையா? ... நமக்கெல்லாம் அது கிடையாதே! என்பது எல்லாம் முட்டாள் தனம். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றைப் பார்தீர்களானால் பொருத்தமே இல்லாமல் போகுங்கள்.. கோப்பியும் பாலும் போல வேறு வேந கலரில...அடேய் இவனைப் போய் இவளா?.... என்று வாயைப் பிழந்திருக்கிறேன். சொல்லுவார்கள் 'தூக்கம் வந்து விட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை' என்று உண்மை தான் போலும். நம்மவரிடையே கல்யாணம் பேசி முடிக்கக் காண்கிறோம், ஆனால் அவர்கள் கல்யாணம் பண்ணமுன் காதலிப்பதில்லையே ஆனால் ஒரு முதுமொழி இருக்கிறது 'காதல் இல்லாமல் ஒரு திருமணம், திருமணம் இல்லாத ஒரு காதல் இரண்டிலும் கிடைப்பது தோல்லிதான்' என்கிறார்கள். ஆனால் இப்படியும் சொல்லுகிறார்கள் ' காதல் சோம்பலாய் இருப்பவர்களின் வேலை, வேலையாய் இருப்பவர்களின் சோம்பேறித்தனம்' உன்மைதான்.

சிலர் காதலை சொல்ல மாட்டார்கள் ஆனால் அதை சொல்ல வேண்டியதில்லையாம் ஏனெனில் ' காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது அரிது'.. இருப்பினும் காதலில் வெற்றி பெறுபவர்கள் அரிதாகவே காணப்படுகிறது ஏனென்றால் 'காதல் ஒரு கண்ணாடி குவளை, அதை மிக இறுக்கமாய் பிடித்தால் உடைந்து விடும். மெதுவாகப் பிடித்தாலோ கை நழுவிப் போகும்'. ஆகவே உங்க பிடியில் தான் அவள் மடி இருக்கிறது. இப்படி ஏகப்பட்ட காதல் வசனங்கள் புத்தியாகவும் காதலருக்கு சக்தியாகவும் இருக்கும் என நினைத்து இதனை திரட்டியிருந்தேன்.

காதல் வசப்பட்டாலும் சில காதலர்கள் தொடர்ந்து சந்தோசமாக இருப்பதில்லை ஏனென்றால் சில பெண்கள் காதனை திருடன், வஞ்சகன், மோசக்காரன் இன்னும் என்னவோ எல்லாம் சொல்லி சிறைகூடம் மட்டும் கொண்டு விடுகின்றனர் காதலர் தினப் பரிசாக. சிலர் ஒருவனுக்கு வாலையும் இன்னொருவனுக்கு தலையையும் காட்டி காதலர் தினத்திலே வேறு ஒருவனுடன் உறவாடி மகிழுகின்றனர். அதனால் தான் சொன்னார்கள் 'ஆவிகளைப் போலதான் உண்மையான காதலும் எல்லாரும் அதைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் கண்டவர்கள் இல்லை' என்று. இருப்பினும் காதலில் ஏமாற்றப் பட்டவர்கள் அதனை ஒரு பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும் வாழ்கை சிறப்பாகும். காதல் அனுபவம் வெற்றியோ தோல்வியோ ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டும் அப்போது ஒரு மனிதன் நிறை வடைகிறான் என்று சொல்லுவதும் உண்டு. ஆகவே காதல் சுழுக்கு போன்றதல்லவா அது ஒரு முறை வந்தால் மறு முறை இலகுவாக வந்தவிடும்.....
'காதல் இன்பத்தைச் சொல்லும்
இன்பம் காதலைச் சொல்லும்'

4 comments:

ம.தி.சுதா said...

நல்லாயிருக்குங்க..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி மதி.....

Unknown said...

ம்ம் இதைப் பற்றி நானும் பதிவிட இருக்கிறேன் பதின் நாளில!

பிரியா ரமணன் said...

கவிதை மிகவும் சிறப்பு!!! but, ஆண்களை விடுத்து
பெண்களை மட்டும் குற்றம் சாடுவதாக உணர்கிறேன்

Post a Comment