ADS 468x60

13 February 2011

காலம் மாறலாம் காதல் மாறுமா?..













வேதம்
கீதை
சித்தாந்தம்
காதல் சொன்னது....

..காதல்
இரண்டு உள்ளம்
இணையும்
வித்தை சொன்னது..
கண்களை
தானமிடும்
கருணை சொன்னது...
எதிரியை
பலம் உடைக்கும்
வீரம் சொன்னது..

உன்னில் என்னை
என்னில் உன்னை
தொலைக்க சொன்னது
உயிர் ஒன்றை அன்றி
உடமைகளை
துச்சமெனச் சொன்னது...

மௌன மொழி -உன்
நாமம் சொன்னது
மலர் விழியோ- உன்
வருகை சொன்னது

ஆயிரம் சொல்லும்
காதல்...
அனுபவித்தால் -தூசி
சாதல்....


அனைத்து காதலருக்கும் எனது உளம் பூத்த காதலர் தின வாழ்துகள்..

0 comments:

Post a Comment