ADS 468x60

07 February 2011

பழகத் தெரிந்தும் விலகத்தெரியாமல்..

பயம்.. பார்வை
தொடுகை... இனிமை
ஈர்ப்பு... உயிர்ப்பு
நீ.. நான்
ஒன்றான நாட்கள்
ஓடி மறைந்தன
உன்னைப் போல்....

உதறல்... கதறல்
உட்காயம்... வெளிக்காயம்
சொல்லெறி... கல்லெறி
அழுகை... விழுகை
கண்ணீர்... கலக்கங்கள்
ஏக்கம்.. ஏமாற்றம்
இத்தனையும் -என்
உயிரை வெடித்தும்....

கருப்புப் பெட்டிபோல்-என்
ஞாபகப் புதருக்குள்
உன் நினைவுத்துளிகள்
ஒட்டிக்கொண்டு
பழகத் தெரிந்தும்
விலகத்தெரியாமல்
இன்னும்
எத்தனை நாட்கள்தான்?????

3 comments:

மதுரை சரவணன் said...

arumai... vaalththukkal

Philosophy Prabhakaran said...

@ மதுரை சரவணன்
// vaalththukkal //

ஏங்க... அவரு பீல் பண்ணி எழுதியிருக்காரு நீங்க வாழ்த்துக்கள்ன்னு சொல்றீங்க...

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி நண்பர்களே..... உண்மையைத்தான் எழுதினேன்..

Post a Comment