ADS 468x60

07 March 2011

உலக அதிசயம்.........


















நீ
கற்பில் கால் நடந்து
மார்பில் பால் சுரந்து
மடியில் உயிர் சுமந்து- தொப்புள்
கொடியில் உறவு ஈர்ந்த
உலக அதிசயம்.

தாலி கட்டி –பின்
தூளி கட்டி
தோழிலாட்டி
நிலாக்காட்டி
தீனி ஊட்டி
நிலாவுக்கே அனுப்பிய
பெருமாட்டி.....

விருட்சமானாலும் - உன்
வித்துக்கள்
தெருக்களில் முளைத்ததால்
சீர் கெட்டு தளைத்ததால்
உனக்கு உலகம் தந்ததெல்லாம்
சகுனி
சூர்ப்பனகை
அரக்கி
வேசி- இதையெல்லாம்
தூக்கி வீசி!!!!

தூய பிறப்பே!
சுட்டெரிக்கும் கற்பே!
தாயே!
எழுந்து நில்!
விழும் இந்த உலகத்தை
கைகளில் தாங்கி
கருணையில் நனைத்து
நல்வழி காட்ட முன்னே செல்!
வாழ்துகிறேன்......

2 comments:

மைதீன் said...

அருமையாக உள்ளது,வாழ்த்துக்கள்.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி மைதீன்......

Post a Comment