ADS 468x60

18 March 2011

"சுப்பர் மூன்" பயமா? அபாயமா!!


இந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை சென்ற காலங்கள் சுமந்து வந்ததுபோலே இப்பொழுதும் புதிதாக ஒரு கதை அடிபடத் தொடங்கி  உள்ளது. அதை நான்கூட நம்பவில்லை அது தான் சந்திரன் பூமிக்கு மிகவும் அண்மிக்கப்போகும் கதை, இதனை ஆங்கிலத்தில் "சுப்பர் மூன்"( SUPPER MOON) என்று அழைக்கின்றனர். இரண்டு தசாப்த காலத்தில் இது முதற்தடவையாக நிகழ இருக்கின்றது. இது புவியை மிகவும் அண்மிக்கும் நிகழ்வாகும் அதாவது புவிக்கு சரியாக 221,567 மைல் தூரத்தில் மார்ச் மாதம் 19ம் திகதி 2011 இல் புவியருகே வர இருக்கிறது. முன்னய பௌர்ணமி நாட்களை விட 14% விகிதம் பெரிதாகவும் 30% விகிதம் தெழிவாகவும் தோன்ற இருக்கிறது. 

இது 1955, 1974, 1992 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அது மிகமோசமான காலநிலை மாற்றத்தினை காட்டி இருக்கிறது. நாசா(NASA) மற்றும் நோவா(NOAA) போன்ற ஆய்வு மையங்களின் எச்சரிக்கைப்படி பாரிய அலைகள் மட்டும் 1 தொடக்கம் 6 இஞ் உயரத்துக்கு ஏற்படும் என கூறியுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் சோதிடர் றிச்சட் நோல் கறிப்பிடுகையில் "இநத சுப்பர் மூன் பாரியளவிலான எரிமலை வெடிப்பு, சுனாமி, நில நடுக்கம் மற்றும் மோசமான கால நிலை மாற்றம் என்பனவற்றினை உண்டுபண்ணும்" என எச்சரித்துள்ளார்.

உன்மையில் ஆய்வாளர்களின் கருத்துப்படி இது அனர்த்தம் விளைவிக்கும் சாத்தியத்தினைக் கொண்டுள்ளதாம். பிறிட்டனின் காலநிலை ஆய்வாளர் ஜோன் கெற்லே கூறுகையில் ' புவியில் ஓட்டில் இது தாக்கம் ஏற்ப்படுத்த மாட்டாது ஆனால் பாரிய அலைகளை, வெள்ளத்தினை இது ஏற்ப்படுத்தும் அபாயம் உள்ளது, ஆதலால் கரையோரங்களில் இருப்பவர்கள் அவதானமாக இருப்பது அவசியம்' எனக் கூறியுள்ளமை அவதானத்துக்குரியதே. அதே போல் யப்பானின் சுனாமிக்கும் இந்த சுப்பர் மூனுக்கும் சம்மந்தம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அனர்த்தம் ஏதும் ஏற்ப்படாமல் இருந்தால், உங்கள் கண்களை, நம்மை நெருங்கும் சந்திர வெளி நோக்கி குவித்தால் அதிர்ச்சி கலந்த பயம் உண்டாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆக மொத்தத்தில் இவற்றை பார்க்கும்போது, இந்த சுப்பர் மூன் பூமி மீதான உயர் அழுத்தத்தினை கொடுக்க இருப்பதனால் பாரிய அலைகள் உருவாவதற்க்கான சாத்தியம் உன்மையே, அதில் நாசா சொல்லுவதை எந்த அளவுக்கு நம்புவது! சோதிடர் சொல்லுவதை ஏற்றுக் கொள்வது எப்படி! என்பது அனைவருக்கும் குழப்பமானதே!. இருப்பினும் எனது பாதத்தின் அடியில் நாளை அவை நடக்கும் போதுதான் என்னால் கூறமுடியும் எது எது சரியென்று. ஆண்டவனை இந்த அனர்த்தங்கள் தாக்கிவிடக் கூடாது என்பதற்க்காய் பிராத்திக்கின்றேன். இந்த சுப்பர் மூன் தொடர்பான ஒரு ஒலி ஒளிக்கலவை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

3 comments:

S.T.Seelan (S.Thanigaseelan) said...

இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்க்கப்படுகிறது.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

19.03.2011 காலையிலேயே பெரும் துளியுடன் மட்டக்களப்பில் மழை தொடங்கியுள்ளது ஒரு அறிகுறியாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ம.தி.சுதா said...

ஆக்கமும் பார்த்தோம் நிலவையும் பார்த்தோம் ரெண்டும் அருமை சகோதரா

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Post a Comment