ADS 468x60

06 April 2011

புலிபாய்ந்த கல்லை ஊடறுத்து ஒரு தமிழ் கிராமம்...

தமிழர்களின் பண்பாடு பொதுவாக மற்றவர்களை வியந்து பார்க்கும் அளவுக்கு அன்பால் அனுசரிக்கும் தன்மையை கொண்டது. இலங்கையில் பொதுவாக செறிவாக தமிழர்கள் வாழுகின்ற இடங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் குறிப்பிடத்தக் ஒன்றாகும். இங்கு அனேகமான மக்கள் அகலப் பரந்து கிடக்கும் வளங்களைப் பயன்படுத்தி தங்களது புராதன முறைகளினூடு உழைத்து வாழும் ஒரு நாகரிக மரபுக்குள் வாழும் பண்பு தனி அழகு. இவர்கள் உன்மையில் மறவர்கள், போராடும் குணம் படைத்தவர்கள் அந்த போராட்டம் வறுமையாக இருக்கட்டும், இயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும், விலங்குகளின் அச்சுறுத்தலாக இருக்கட்டும் அவற்றுக்கு எதிர்த்து போராடியே வாழும் இவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. 

வெள்ள அனர்த்தத்தின் பின் மக்களின் உணவுத்தேவை அதன் பாதுகாப்பு பற்றி எல்லாம் உலக உணவுத்திட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு மதிப்பீட்டு நடவடிக்கையில் நானும் கலந்து கொண்டிருந்தேன். மாவட்டத்தின் வடக்குப்பறத்தில் அமைந்து காணப்படும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் இரு தசாப்த கால வன்முறை, ஆட்கடத்தல் மற்றும் இன்னோரன்ன நெருக்கடிகளுக்குள் இருந்து மீண்டும் மீளமுடியாத நிலையில் மலையடி வாரங்களிலும், காடுகளுக்கிடையிலும் ஒதுக்கப்பட்ட ஒரு சமுகம் போன்று வாழ்ந்து வரும் எம்மினத்தை காண ஒரு வாய்ப்பு கிட்டியது. எனக்கு ஏதோ வேறு ஒரு நாட்டில் நிற்ப்பது போன்று ஒரு பிரமை அப்படி மாறுபட்ட சூழல், மக்கள், தொழில் அத்தனையும் என்னை மொத்தமாக வியப்பூட்டியது.

சந்திவெளி பிரதேசத்தினை ஊடறுத்து புலிபாய்ந்த கல் ஊடாக ஈரலைக்குளம் எனும் குக்கிராமத்தினை எமது குழுவினர் சென்றடைந்தனர். போகும் வழியெங்கும் அத்தனை அழகு, தொப்பிக்கல் மலை, குடிம்பி மலை மற்றும் டோறா வோறா மலைத்தொடர் என அனைத்தையும் கடந்து சென்றோம்.

இந்த பிரதேச செயலக பிரிவுக்குள் மட்டும் 78344 பேர் அண்மைய வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப் பட்டிருந்தனர். இங்கு மக்கள் பொதுவாக் காடுகள், சேனை, வயல் நிலங்கள், புட்தரைகள் போன்ற வளங்களை கொணடடுள்ளனர், இவை தான் அந்த மக்களுக்கு அரன். தவிரவும் அவர்கள் பழக்குப்பட்ட இயற்கையோடு இயைந்த வாழ்க்கை இவை யெல்லாம் அவர்களை ஆசை கொள்ள வைத்திருக்கும் வளங்கள் என்றால் மிகையில்லையே!..

இந்த ஈரலைக் குளம் 29 குக்கிராமங்களைக் கொண்ட ஒரு கிராம சேவகர் பிரிவாகும், இங்கு 424 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் என கிராம சேவகர் திரு வீரசிங்கம் சொன்னார். ஆனால் 19 கிராமங்களில் மட்டுமே மக்கள் வசித்து வருகின்றனர் எனவும் கூறினார். போகும் வழியில் இலுக்குப் பொத்தான எனும் இடத்தில் மதிப்பீட்டக்கு வந்தோம் மிகவும் வறுமையில் வாடும் ஒரு குக் கிராமம், இங்கு கூலி வேலை செய்வோர் அதிகமாகக் காணப்படுகின்றனர், பெண்கள் கூட அனேகமாக கூலி வேலை செய்கின்றனர். காரணம் கணவனை இழந்த பெண் விதவைகள் அதிகம் காணப்படுகின்றனர். 
                         (இலுக்குப் பொத்தானை மக்களும், மாக்களும் குளிப்பாடும் நீரேரி)
குடிப்பதற்கு குளிப்பதற்க நீர் இல்லை வாய்க்கால் தான் எல்லாவற்றுக்கும். மாடுகளும் அங்கே மனிதர்களும் அங்கே...அதனால்; பார்ப்பதற்கு வெளியில் அசிங்கமாகவே இருக்கின்றனர் ஆனால் உள்ளுக்கு தங்கமான மனசி.

'படிக்க விட்டால் யார் என் இளய மகளுக்கு பால் ஊட்டுவது' என மனைவிலை இழந்த குடும்பத்தலைவர் செ.சின்னத்துரை என்னை பார்த்து கேட்டார். ஊழைத்து உழைத்து தனது உடல் ஓடாய் இருந்தது. இவர் 5 பிள்ளைகளுக்கு பொறுப்பு வாய்ந்த தாய், தகப்பன் எல்லாமாகவும் இருந்தார். விறகுவிற்பதையே தொழிலாகக் கொண்ட இவர் வேறு கூலி வேலைகளுக்கும் செல்வதுண்டு. இவர்கள் 2003 இல் தனது சொந்த மண்ணை விட்டு மாவடிவேம்பில் இடம்பெயர்ந்து இருந்த போது குழந்தைப் பிரசவத்தின் போது தனது மனைவியை இழந்து குழந்தையை மட்டும் உயிருடன் கடவுள் கொடுத்தான்.
                                                     (சின்னத்துரை அவர் மகள் வெள்ளையம்மாவுடன்)
சின்னத்துரையிடம் முதாலில் தர்சினியின் அம்மா எங்கு என்று கேட்டபோது வெள்ளையம்மாவை தான் காட்டினார் ஆச்சரியமாக இருந்தது.
'எனக்கு பள்ளிக்கு போறன்டா சரியான விருப்பம் அண்ணா ஆனா அம்மா செத்த பிறகு தர்சினிப் பிள்ளையை வளக்க யாரும் இல்ல அதால தான் நான் 2 வருசம் பள்ளிக்கு போக முடியல்ல, இப்ப 2 வருசம் பிந்தி பாடசாலையில சேத்தாங்கள்' என்றாள் சின்னத்துரை வெள்ளையம்மா எனும் இந்த கள்ளமற்ற குழந்தை தாய்

ஆந்த இடத்தில் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் என்னால் கூறக் கூடியதாய் இருந்தது ஆசை வார்த்தை காட்டி அரசியல் வாதிகள் போல் மோசம் செய்ய நான் விரும்மவில்லை. எமது தமிழ் இனம் இப்படியும் இருப்பது தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டேனே என்று வருத்தப்பட்டேன். இதை நீங்களும் தெரிந்து கொள்ளனும் என இதை யாத்திருக்கிறேன்.
                                        (பிள்ளை வெள்ளையம்மா குழந்தை தர்சினியுடன்)
வசதி இருத்தும் படிக்காத பிள்ளைகளுக்குள் இந்த சிறிய குழந்தை சிறிய குழந்தையை மட்டும் சுமக்கவில்லை வறுமை, பட்டினி, பாதுகாப்பு இன்மை, ஓரங்கட்டுதல், இது போன்று இன்னும் இன்னும் சுமைகளுடன் வாழும் இவளால் படிக்க இருக்கும் ஆர்வத்துக்கு யார்தான் கை கொடுப்பார்!

இவள் போன்று எத்தனையோ வெள்ளையம்மாக்கள் எம் இனத்தின் புத்தி ஜீவிகளே விழித்தெழுங்கள் இன்னும் இன்னும் இலுக்குப் பொத்தானை கிராமங்கள் உருவாகும் பரிதாபம் எமது உறவுகளுக்கு ஒரு சாவக்கேடாக இருப்பதை களைந்தெறிய கை கோர்ப்போம். இப்படி நிலமை இருக்க 'மித மிஞ்சிய வறுமையையும், பட்டினியையும்' ஒழிக்கின்ற மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை இலங்கையினால் அடைய முடியுமா என்கின்ற கேள்வி தொக்கு நிற்கிறது அல்லவா?
                                             (வெள்ளையம்மாவுடன் நானும்)
1990க்கும் 2015க்கும் இடையில் தேசிய வறுமைக்கோட்டை விட குறைந்த வருமானத்தை கொண்டுள்ள மக்களின் கதவீதத்தை அரைவாசியாக்குதல், அதுபோல் பெண்கள் மற்றும் இள வயதினர் உட்ப்பட சகலருக்கும் முழுமையானதும், உற்ப்பத்தி திறனிலாலானதுமான தொழிலையும், மற்றும் கௌரவமான வேலையையும் பெற்றுக்கொடுத்தல், 2015க்குள் பட்டினியிலிருந்து துன்ப்பப்படும் மக்களின் சதவிகிதத்தை அரைவாசியாக்குதல் என்பன் இந்த வெள்ளையம்மாக்கள் வாழுகின்ற இலுக்குப் பொத்தானை கிராமங்களையும் சேத்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவை நடக்குமா என்பது ஆண்டவனுக்கு மாத்திரம்தான் வெளிச்சம்..

3 comments:

Mohamed Faaique said...

இது போல் நிறைய ஊர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன...

Mohamed Faaique said...

http://faaique.blogspot.com/

மலை நாட்டுப் பக்கமும் கொஞ்சம் வாங்க நன்பா

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி நண்பரே எனக்கு இயலுமானதை செய்கிறேன்.. விரைவில் வருவேன்.. அவர்களும் மனிதர்களே..

Post a Comment