ADS 468x60

24 May 2011

பெண் சிசுக்களைப் பலிகொடுக்கும் இந்தியா....


இந்த உலகத்தில் இந்தியாவில் ஏழு வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகளில் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, தரவுகளின்படி எட்டு மில்லியன் பெண் குழந்தைகள் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர் இந்தியாவில். வறுமை, விருப்பமின்மை, பெண்கள் இன்னொரு வீட்டுக்கு போகும் ஒருத்தி, சீதனக் கொடுமை இது போன்ற ஏராளமான காரணங்களினால் பெண் குழந்தைகள் தாயின் முன்னே பரிதாப கரமாக இறக்க வைக்கும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், பெண்கள் பிறப்பது ஒரு சாவக்கேடு என்ற ஒரு அநியாயத்துக்கு நியாயமான காரணங்களினால் கருவிலும், பிறந்த பின்னும் எத்தனையோ குழந்தைகள் அழிக்கப்படுகின்றன என்ற உன்மையை பீ.பீ.சீ செய்தி சேவை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கல்வான் என்ற பெண்மணி 2 பெண் பிள்ளைகளைப் பெற்று எடுத்து பின்னர் மூன்றாம், நான்காம் ஐந்தாம் பிள்ளைகள் பெண்ணாகப் பிறக்க இருப்பது ஸ்கான் பரிசோதனை மூலம் அறிந்த பின்னா,; தனது மாமியார் அவரை அச்சுறுத்தி, இந்த மூன்று பிள்ளைகளையும் கருவிலே அழித்தனர், அது தனது மாமியார் தன்; மகனை விவாகரத்து செய்யப்பண்ணப் போவதாகச் சொல்லியே இதனை சாதித்தனர். இதற்கு பின் பிறந்தது ஆண்குழந்தை, ஆதலால் அவனுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் கல்வான் தெரிவித்திருந்நதாக அச்செய்தி கூறுகின்றது. அவர்களுக்கு தேவை ஆண் குழந்தையே, ஏனெனில் அப்போதுதான் அவனுக்கு கொழுத்த சீதனம் பெற்று கொள்ளலாம் என்று அவர்கள் கூறியதாக கல்வான் மனமுடைந்து சொல்லி இருந்தாள்.

குழந்தைகளை இறக்கவைக்கும் முறை..
தேவையில்லாத குழந்தைகளை அங்கு கொல்லும் அநாகரிகமற்ற செயல் மிகவும் கொடூரமானது. குழந்தை பிறந்தவுடன் ஈரப்பைக்குள் போட்டு மூச்சி எடுக்கவிடாமல் கொலுவது, பிறந்தவுடன் குழந்தைக்கு பாலுடன் நெல்மணிகளை போட்டு அது மெல்லிய தொண்டையை அறுப்பதனால் அக்குழந்தையை இறக்க வைப்பது, அக்குடுமமபத்தினரால் அல்லது இக்கொலை செய்வதில் பரிட்சயமானவரினால் தான் இவை செய்யப்பட்டு, அந்த ஏழைத்தாய் அதன் பின் குப்பை கூட்டும் வேலைக்கு பலவந்தமாக 50 ரூபாய் பணத்துக்கு அனுப்பி கொடுமைப்படுத்துகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பாக தழிழ் நாட்டில் தர்மபுரி, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில்; அதிகம் காணப்படுவதாக சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும் தர்மபுரியில் மாத்திரம் வருடத்துக்கு 1300 கழந்தைகள் அவ்வாறு கொல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சட்டங்களும் ஓட்டைகளும்...
1961இல் இந்தியா சட்டப்படி சீதனம் வேண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்திருந்த போதிலும் அவை இன்றும் ஒரு படி வளர்சியடைந்து அது வறியவர் செல்வந்தர்கள் என பகுபாடு பார்க்காமல் எல்லோரையும் பாதித்துள்ளது. இந்த பெண்ணின் செய்தி மில்லியன் கணக்கான குடும்பங்களின் மூடத்தனமான செயலையே சுட்டி நிற்கின்றது.

தகவலின்படி 1961 இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆனால் அவை இன்று 914 ஆக குறைந்துள்ளது. அதற்கும் மேலாக பெண்களின் வளர்ச்சி எல்லா துறைகளிலும் பரிநமித்து நிற்ப்பதோடு, சைனாவின் ஆண்களுக்கான பெண்களின் போதாமையினை விட இந்தியாவில் அது மிக மோசமடைந்துள்ளது, என்று தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றது.

பரிசோதனைகளும் பாதகமும்.
குழந்தை பிறந்து 24 மணிநேரத்துக்குள் குடம்பத்தினரின் சம்மதம் அல்லது விருப்பத்தடன் கொலை செய்தல் (Infanticide)  மற்றும் கருவிலே பிள்ளையை வளரவிடாமல் சத்திர சிகிச்சை செய்தல்   (Foeticide) இந்த நாட்டுக்கே ஒரு அவமானச் சின்னமாகும் இவை இந்நாட்டின் பெண்பிள்ளைகளை காப்பாற்றுவதற்க்கான பாரிய இடர்களாக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.

1974 இன் பின் இந்த பால்நிலையை குழந்தை பிறக்குமுன்னே அறிந்துகொள்ளும் ஆர்வம் இந்நாட்டு மக்களிடையே அதிகரித்துக் காணப்பட தொடங்கியது, என அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிலைய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இது, எத்தனையும் ஆண் பிள்ளைகளை பெறலாம் என்பதற்க அப்பால் பொதுவாக சனத்தொகை வளர்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு உத்தியாகவும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தொரிவிக்கின்றனர்.

குறிப்பாக 1980 களின் பிற்ப்பாடு, வயிற்றில் கருவுற்றிருக்கும் குழந்தைகளின்; பால் வகுப்பை அவர்களின் உடல் அமைப்பைப் கொண்டு கண்டறியும் பரிசோதனை (Ultra Sound Determination test)  பத்திரிகைகளில் முந்தியடித்துக் கொண்டு விளம்பரப்படுத்தியமை அதன் கேள்வியின் நிலையை உணர்த்துளின்றதல்லவா. 1994 காலப்பகதியில் ஆரம்ப கால உயிரியல் தீர்மானத்திற்க்கான பரிசோதனை (Pre- Natal determination Test (PNDT)) குழந்தைகளின் பால் வகுப்புக் கண்டு பிடித்து குழந்தைகளை கொலைசெய்வது தடை செய்யப்பட்டு இருந்தது.

இருப்பினும் 2004 இல் இது மீண்டும் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டு குழந்தை கருத்தரித்த சிறு காலத்திலேயே கண்டறிய கூடிய நிலையில,; இது இருந்து வந்தது. இருப்பினும் இத்தகைய குழந்தைகளை கருவிலே அழித்தல் சட்டப்படி 12 வாரத்துக்குத்தான் அந்நாட்டுச் சட்டப்படி செல்லுபடியாகும், ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதனை அறிய 14 வாரம் தேவைப்படுகின்ற படியினால்தான் இது சாத்தியமாகின்றது. இன்று இந்திய நாடெங்கும் 40,000 பால் நிலைப் பரிசோதனை நிலையங்கள் முளைத்து, பல விலாசமே இல்லாமல் துலைந்து போய்விட்டதாகவும் BBC செய்தி தெரிவிக்கின்றது.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் இந்த கொலைக்கான ஒட்டுமொத்த முதற்க்காரணம் இந்த குழந்தை பிறக்குமுன்னரான பரிசோதனைகளின் அதிகரிப்பு, சட்டத்தின் இறுக்கமற்ற தன்மை, குடும்பத்தின் மூட நம்பிக்கை, பெண்கள் மீது வைத்திருக்கும் வெறுப்பு, சீதனக் கொடுமை போன்ற இன்னோரன்ன காரணங்கள் இக்குழந்தைகள் பரிதாபகரமாக கொல்லப்படுவதற்கு தூண்டுதலாக இருக்கின்றது. ஒரு மன வேதனை என்னவெனில் முல்லை கொடி படர கொப்பு இல்லாமல் சுடு வெயிலில் கிடப்பதை தாங்காமல் தனது தங்கத் தேரினை அது படர்ந்து செல்ல நிறுத்திச் சென்ற காருண்யமான நாட்டில் ஒரு மனிதக் குழந்தை வாழவிடாமல் அழிக்கும் செய்தி காதில் வெண்ணீராய் பாயுது.

23 May 2011

தமிழ் முத்தம்..

Myspace Showing Love Graphics Loving Clipart


கைகள் சுற்றி வழைத்து
கழுத்தின் நாண் உயர்ந்து
இழுத்து உடன் அணைதது
பழுத்திருக்கும் இதழோரம்
பனித்திருக்கும் சுவை கலக்கும்
மேலை தேச முத்தச்சுவை
காமம் அடக்கும் கயிறாகலாம்
கன்னத்தில் குழந்தை முத்தம்
கைகளில் வீர முத்தம்
நெற்றியில் காதல் முத்தம்
நெஞ்சில் கலங்கும் முத்தம்
எத்தனை எத்தனை முத்தம்
அத்தனையும் இருந்தாலும்
தழிழ் கலந்து தழுவும் முத்தம்
தரணியிலே நிலைக்கும் நித்தம்


22 May 2011

நாகரிக வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் நாட்டுப்புற வழக்காறுகள்.

மனித இனம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவு பழமை மிக்கது நாட்டுப்புறவியலாகும். இதில் மட்டக்களப்பு அளவில் எத்தகு நிலையில் நாட்டுப்புறவியல் விளங்கியது என்பதைக் காணும் போது, மட்டக்களப்பில் நாட்டுப்புறவியல் துறை தனித்ததொரு துறையாக வளரவில்லை. ஆனால் அது சமயம், தமிழ், விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளை சார்ந்து மட்டக்களப்பில் ஒரு சமுகத்தின் நாரிகக் கண்ணாடியாகவே அமையப்பெற்றிருந்தது.

குறிப்பாக மானுடம் தொடங்கிய காலம் முதலே நாட்டுப்புற வழக்காறுகள் தோன்றிவிட்டன. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்த படைப்புத்திறன் மிக்க வழக்காறுகள் இலக்கியமாகப் பரிணமித்தன. அவை,

1) பொது மக்களைச் சார்ந்த மரபுமுறைகள் என்றும்,
2) பொது மக்கள் இலக்கியம் என்றும்,
3) பொதுப் புராணவியல் என்ற
பெயர்களிலும் வழங்கப்பட்டன.

ஆனால் வில்லியம் ஜான் தாமஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1846 ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும்
"Folklore" என்ற சொல்லை உருவாக்கி உலகுக்கு வழங்கினார். இச்சொல்லே பெருவாரியாக எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு  வருகின்றது. இவ்வாறு, மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டுப்புறவியல் என்பது பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்பது அவர் கருத்தாகும்.

உலக நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரெஞ்சு, ஜெர்மன், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்விலக்கியத்தின் பல்வேறு கூறுகளை, தத்தம் மண்ணின் மணம் வீசத் திறனாய்வு செய்து உலகளாவிய அளவில் நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினை உணரும்படி செய்தன

ஒரு சமுகத்தின், இனத்துவத்தின் தனித்தன்மையை புடம்போட்டு, பட்டை தீட்டிக்காட்டுவது அதன் வளக்காறுகள், ஒழுக்க விழுமியங்கள், பண்பாட்டு மரபுகள் என்பவைதான். நாகரிக வேலிக்குள் அகப்பட்டுக்கிடக்கும் தேன் தமிழ் வந்து பாயும் மட்டக்களப்பின் வழக்காறுகள் மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின் தற்பொழுது சிறியளவில் தூசிதட்டி பார்க்கும் ஒரு போக்கு வரவேற்க்கத்தக்கதே. இருப்பினும் அவையெல்லாம் அழிந்து போகும் இத்தறுவாயில் மீட்டெடுக்க போதுமான சத்திகளா! என்ற கேள்வி தொக்கு நிக்கின்றது. சோதிடம், கிராமிய பூசை நடைமுறைகள், விருந்தோம்பல், கூத்து, கரகம், கும்மி, மகிடி, விளையாட்டுகள், பழமொழிகள், மாந்திரிகம், சோதிடம், பறை மேளம் போன்ற அரிய தழிழ் சொத்துக்கள் இன்று எங்கே போய்விட்டது??
"காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.""http://vadaliyooraan.blogspot.com/"

ஆய்ந்து அறிந்து சொல்லுவது ஒன்றும் முக்கியமல்ல, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு தழிழுர்கள் ஒவ்வொருவுரினதும் பொறுப்பல்லவா? இல்லாவிடின் நாளை இன்னொருவன் வந்து இங்கு தழிழர்கள் வாழ்ந்தார்களா! என்று கேட்கும்போது, நாங்கள் அவற்றின் அடையாளங்களை துலைத்து பல்லை இழித்தால் பயன் இல்லை.. நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.. இச்சமாதான காலத்தில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீளமைக்க வேண்டும்.. அது தான் நமது அடுத்த பரம்பரைக்கு இனத்துவ அடையாளமாக அமையும் என்பதை உணர வேண்டும்.
இந்த நிலையில் நான் மட்டக்களப்பின் மத்தியில் முந்திரிகை மணம் வீச வெள்ளரி வளம் கொலிக்கும் புதுக்குடியிருப்பு என்னால் மதிக்கப்படும் ஒரு தழிழ் கிராமம் என்றால் அது மிகையாகாது. அங்கு அண்மையில் நடந்து முடிந்த கண்ணகை குளிர்திதில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அத்தனை பாரம்புரியம், பண்பாடு, நாரிக விழுமியம்..சோக்கான குடிமக்கள்... இது போன்று எமது ஏனைய தழிழ் மக்கள் தங்களது தனித்துவத்தினை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.அதன் சில புகைப்படங்கள் இங்கே...
..

ஆனால் இப்போது, சினிமா மோகம், ஊடக துறையின் முறைகெட்ட அபார வளர்ச்சி, தொலைத் தொடர்பு தொல்லை, பாரம்பரியத்தை பாராமுகமாப் பார்க்கும் அநாகரிக மாயை..போன்ற இன்னோரன்ன காரணங்களால் எமது தமிழ் மக்களின் தூய தனித்துவங்கள் மழுங்கடிக்கப்பட்டு மாற்றான் பிள்ளைகளாக மாறி நமக்கென ஒரு தனித்துவம், கலாசாரம், இன்னும் எல்லாவற்றையும் அழித்து வாழுகின்ற சமுகத்தை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.

பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள், பாடசாலைகள் இவர்கள் ஒரு சமுகத்தின் முதுகெலும்புகள் அல்லவா அவுர்கள் வளைந்து விடக்கூடாது நிமிந்து நின்று இந்த கமுகத்தின் தனித்துவம் காப்பது அவர்களது பொறுப்பாகும் அல்லவா??

20 May 2011

கண்டீர்களா, என் காதல் தேவதையை!...

Myspace Dark Angels Graphics Angel Clipart
இரக்கை
முளைத்திருக்கும்
இமைகள்
பனித்திருக்கும்..
வெண் மேக
ஆடை மூடி!
கண்ணோரம்
மின்னல் ஓடி!!
மண்ணிலே
பூக்கள் கூடி!!!
வடித்து எடுத்த
சிற்ப்பமோடி!!!!...

கவிக்குள் வராத அழகு!
கவிழும் உனைப்பார்த்து உலகு!!..
தேடித் தேடி ஒடிந்தேன்
ஓடி ஓடி மடிந்தேன் -உலகில்
கண்டீர்களா!!
என் காதல் தேவதையை!...

19 May 2011

முழு நிலா

Myspace Dark Angels Graphics Angels Clipart

பளிச்சிடும் முழு நிலா –உன்
        பார்வை தேன் பலா..
என்னிடம் நீயிலா...
       ஏங்கிடும் நம் உலா.

கண்கள் இமை மூடும்
        குளிரோடை..
காமன் மலர் தோட்ட
         மணவாடை..
இதழ்களின் இடையினில்
         இதமான தேன் விழும்
இரவுகள் விழித்திடும்
        இளமகள் தேருலா

கைகள் அணைத்திட
உனைத் தொட
குனிந்திடும் முகத்தினில்
மோகம் வந்து சேரும்..
பளிச்சிடும் முழு நிலா.....

18 May 2011

சாதனை!



வாழும்போது சாதனை
அது -
கண்களை இருட்டி,
எலும்பினை புடைத்து
உயிரை காவு கொள்ளும்,......
பட்டினிக் கொடுமையில்
சாகும்
உயிர்கெல்லாம்.....
ஒரு பிடி சோறு கொடுப்பது.

இதயம்..

Wing Love Heart Hearts 3d wallpaper animated and screensaver for phone cell mobile skull skulls screensavers wallpapers phones mobiles effects animation firewosks flames flame
நெஞ்சினுள் கூடு கட்டி,
நினைவுகள் கோடி வைச்சி,
பஞ்சிபோல் உள்ளே இருக்கும்..
இதயமே!

கண்ணை வைத்து,
காதை வைத்து,
வாயை வைத்து,
வயிற்றை வைத்து
உன்னைக் காட்டும் - இறைவன்,
இதயம் வைத்து,.....
மறைத்து விட்டான் மனதை..

வெற்றுச் சிரிப்பில்,
விழுந்து எழுந்து
கட்டி அணைப்பில்,,,,,
விட்டு மறந்து.....
பட்டதெல்லாம் வேசம்..
தொட்டதெல்லாம் மோசம்...
உன்னைக் காட்டும் - இறைவன்!!
இதயம் வைத்து
மறைத்து விட்டான் மனதை..!

என் கண்ணில் கண்ணீர்....
உன்கண்ணில் உதிரம்!!
என் வயிற்றில் பசி .....,
உன் முகத்தில் கலவரம்..
எனக்கு காச்சல் வந்தால்
உனக்கு தலை வலிக்கும்...
எனக்கு நீ என்றேன்
உனக்கு நான் என்றாய்...
இதயம் கண்டேன்..

உன் செயல்களின்
மறுமொழியில்
கண்களின் உவர் கசிவுகளில்
இதயம் கண்டேன்.

மென்மையாகப் பேசுவோம், மேன்மை பெறுவோம்.


'நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு' உலகத்திலேயே பெரிய ஆயுதம் எது எனின் அது நாக்குத்தான்... அதை நாங்கள் அவதானமாகப் பாவிக்காவிடின் பின்னர் மிக மோசமான பழிக்கு ஆளாகி விடுவோம், என்கின்ற உன்மையை வள்ளுவப் பெருந்தகை மேலுள்ள அடியில் தெழிவுறுத்தியுள்ளார்.

பேச்சற்ற சிந்தனை இருக்கலாம், ஆனால் சிந்தனையற்ற பேச்சு இருக்கவே கூடாது. மனிதனின் தனிச்சிறப்பே, அவனின் சிந்தனைத் திறன்தான். சிந்தனையின் வெளிப்பாடே பேச்சு, பேசும் திறன். மனித இனத்துக்கு மட்டும் இறைவன் கொடுத்த அருள் பரிசு அது.

இன்றய வாழ்வின் தனிமனிதனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாய் இருப்பது பேச்சுத்திறன். இதைத்தான் 'நாநலம்' என்பார் வள்ளுவர்.

'நாநலம் எனும் நலனுடமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று'

வாய்திறந்து வெறும் வார்த்தைகளைக் கொட்டுவது பேச்சு அல்ல. அது பேதைகளின் வார்த்தை சலசலப்பு, ஜாலமும் கூட. அங்கு கருத்துகள் கலக்காத காற்று ஓசை மட்டுமே, கேட்பவரின் நெஞ்சையும் அது தொடுவதில்லை, கேளாதாரையும் ஈர்ப்பதில்லை.

சமுதாயத்தின் மதிப்பும் மரியாதையும் தேடித்தருவது பேச்சுத்தான். ஒரு சொல் வெல்லும்; மறு சொல்லோ கொல்லும்! இத்தகைய சக்தி வாய்ந்த கருவியை, அறிவின் துணை கொண்டே பயன்படுத்தவேண்டும். அதனால்தான் சொல்வார்கள், எண்ணங்களின் மேலாடையே பேச்சு என்று.

பண்டைய காலத்தில், பேசும் கலை மிகவும் உச்ச நிலையில் இருந்தது. அக்காலத்தில் மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்க வேறு வழி இருக்கவில்லை, எனவேதான் பேச்சு, கலை வழியாக, கவிதையாக, கருத்துக் குவியல்களாக, எழிமையாக ஏற்றம் மிகு நடையில் சொல்லி வைத்தார்கள்.

இன்று அச்சுக்கலையின் அபார வளர்ச்சியாலும், ஊடகம், சினிமா மோகம் இது போன்ற அறிவியலின் விளைவுகளாலும் பேச்சுக்கலை மூச்சிழந்து நலியத் தொடங்கி இருக்கிறது.  அழகாக - அறிவுடன் - இனிமையாக பேசத் தெரிய வேண்டும். எந்தச் சூழ்நிலையில், எவருடன் பேசுகிறோம் என்பதனை உணர்ந்து, மற்றவரின் திறன் அறிந்து, எளிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.

உன்மையில் 'சிந்தனையின் அழகு சொல்லில் மிளிர்கிறது' என்பார் இராஜாஜி. எவரிடமும் பேசுவதற்கு முன் தெளிவான சிந்தனை ஓட்டம் வேண்டும்.
வார்த்தையில் இனிமை என்ற சொல் தேனில் தோய்க்கப்படவேண்டும். உணர்ச்சிகள் என்ற பட்டாடைகள் போர்த்தப்பட வேண்டும். சொற்க்கள், மலர் அன்புகளாய்க், கேட்பவரின் இதயக் கதவுகளை, தளிர் நடை பயிலும் தழிழ் தென்றலாய் தழுவவேண்டும்.

மேன்மையாகவே மேதினியில் பேச வேண்டும், கேட்பவரின் உள்ளத்தை அன்பால், அறிவான சொற்களால், இனிமையாக, இதமாகப் பேசி முற்றுகையிட வேண்டும். அந்த மோகன வேலை நமக்கு முழு உலகத்தினையே வாங்கிக் கொடுத்துவிடும் இல்லையா. அன்பு இதயம் கிடைத்துவிட்டால், அவணியில் ஆகாத காரியமும் உண்டே.. எனவே அன்பாகப் பேசித்தான் பழகுவோமே!!!!!

14 May 2011

சிலுவை சுமக்கும் காதல்...


Fantasy Women Graphics Dark angels Clipart
P/
ஆவியாகும் ........
என் நெஞசக் கனவுகள்
இன்னும் இன்னும்
உவப்பு மழையாக,
சொரியும்; கண்ணீர்;
மேகங்களுடன்..
அடித்துச் செல்லும்
சோக அலையில்
நானும்,,
எனது ஆசைகளும்
கரையைத் தேடியே..
காலங் கழிக்கும் வேதனை....
மதவெறி பிடித்த
மங்கையின் சோதனை..
எல்லாம்..
என்னை காதல் சிலுவை
சுமக்க வைக்கின்றனவே......

09 May 2011

இந்தியாவில் தாயாகாத பெண்ணுக்கு சன்மானம்....


முழு சந்தோசங்களையும், வாழ்கைகளையும் நேரத்தையும் செலவிட்டு எம்மையெல்லாம் முழுமையாக உருவாக்குவதற்க்காக தன்னை அர்ப்பணிக்கும் ஜீவன் இவ்வுலகில் யார் இருக்கின்றார் என்று கேள்வி கேட்டால், அது தாயாகத்தான் இருக்க முடியும். இவள் உருவாக்க முடியாத உறவு, கண்களில் எண்ணையை வைத்து கருத்தாக காக்கும் உயிர், மன்னவனும் விண்ணவனும் போற்றும் கருணைக்கடல்... அது தாய் ஒன்றாக மாத்திரம்தான் கருதலாம். ஆதனால்தான் அன்னையர் தினம் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டாடப்படுகின்றது.. அது சாலப் பொருத்தமானதும் கூட.

தாய்மை பற்றி ஒரு புதிய தகவல் விடயம் பற்றி தெரிவிக்கலாம் என விரும்புகிறேன். யாரும் திருமணத்தின் பின் தாய்மை அடையக் கூடாது என்று விரும்புவதில்லை மாறாக தாய்மையடைவதை ஒரு பேறாகவே எம்மத்தியில் கருதி வருகின்றமை காணக்கூடியதாய் உள்ளது..

மேற்கு இந்தியாவின் ஒரு சட்டார் எனும் விவசாய பிராந்தியத்தில் அரசாங்கம் 106 அமெரிக்கன் டொலர்களை, திருமணத்தின் பின் இரு வருடங்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வழங்கி வருகின்றது. இதனிடையே அனேகமான பிள்ளைகளை மிகக் குறைந்த இடைவெளியில் பெற்றுக்கொள்ளுவது அவ்வளவுக்கு அரோக்கியம் இல்லை என்பதற்க்கில்லை, என்றும் கருத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. இது சனத்தொகை அதிகரிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அமுலாக்குவது பொருத்தமாகவும் இருக்கலாம் என்பதற்கு இது நடைமுறைப்படுத்துவது என்னவோ உன்மைதான்.

இப்பொழுது இந்தியாவின் சனத்தொகை 1.2 பில்லியனாக இருந்து வரும் நிலையில் இது இன்னும் ஒரு தசாப்த காலத்தினுள் சைனாவின் சனத்தொகையினை விஞ்சி 1.5 தொடக்கம் 1.9 பில்லியன் சனத்தொகையாக மாறி உலகிலே அதிக சனத்தொகையினைக் கொண்ட நாடு என்ன பெயரினை பொறிக்க இருக்கிறது. இது அந்நாட்டு அரசை குறைந்து வரும் வளத்தினிடை கூடிவரும் சனத் தொகையை வைத்து என்ன பண்ணுவது என்ற சங்கடத்திற்குள் உள்ளாக்கியுள்ளதாம். என "சேஞ்ச்" என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகலாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆரோக்கியமான ஒரு சமுகத்தில் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தைகள் இருப்பது உலகத்தின் சமநிலையை பாதுகாக்க உதவியாய் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதனை அதிக வருமானங்களைப் பெறுகின்ற கல்வியில் வளர்ச்சி கண்ட நாடுகள் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வறுமையான மூன்றாம் மண்டல நாடுகளிடையே ஒரு குடும்பத்தில் 4 குழந்தைகளுக்கு மேல் சராசரியாகக் காணப்படுகின்றமை காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் மேற்கிந்தியாவில் மாத்திரமல்ல பல நாடுகளில் காட்டமாக குழந்தைகளை பெறக்கூடாது என்ற சட்டரீதியாக பல கொள்கை அமுலாக்கலை கொண்டு வருவதும், ஊக்குவிப்பு தொகையினை அறிமுகப்படுத்தி தாய்மையை அழிப்பதும் உன்மையிலே தாய்மைக்கு நாங்கள் செய்யும் அவமானமாகத்தான் இருக்கிறது. குழந்தை பெற்றுக் கொள்ளுவதும் பெறாமல் இருப்பது;ம அத்தாயின் முடிவில் இருக்கவேண்டும் என்ற ஒரு பொதுக் கருத்து காணப்படுகின்றது.

இருப்பினும் சிறுவயதில் சட்டரீதியற்ற முறையில் திருமணம் செய்வோர் இந்த பிராந்நியத்தில் 25 விகிதமாக இருக்கின்றது என்றும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே எது எப்படி இருப்பினும் தாய்மை பற்றி இந்த உலகம் மிகுந்த அக்கறை காட்டி தான் வருகின்றது. மிக நுணுக்கமான முறையில் சட்டங்களையும் கொள்கை அமுலாக்கங்களையும் செய்து ஆரோக்கியமான ஒரு சமுகத்தினை கட்டியெழுப்புவதனூடாக தாய்மைக்கு நல்ல மரியாதையைப் பெற்றுக் கொடுக்கலாம் அல்லவா. நாங்கள் எங்கள் தாயை மாத்திரமல்ல, பாட்டியை, மனைவியை எல்லாம் தாயாக அன்னையர் தினத்தில் மாத்திரமல்ல நாள்தோறும் ஆராதிக்கப் படவேண்டியவர்களே...

அம்மானா சும்மா இல்லடா..











உலகுக்கு உணவளிக்க
களத்து மேட்டு கண்ணம்மா!
உள்ளவரின் பிள்ளைகட்கு
ஊட்டி வளக்க சின்னம்மா!!

நிழலில் நீயிருக்க
வெயில் குளிக்கும் உன்னம்மா!!!
மடியில் சுமந்து
மனிதனாக்கிய என்னம்மா!!!!

காட்சிதந்தும் கருணைதந்தும் 
கடவுள் வேண்டும் இன்னுமா!!!!??