பளிச்சிடும் முழு நிலா –உன்
பார்வை தேன் பலா..
என்னிடம் நீயிலா...
ஏங்கிடும் நம் உலா.
கண்கள் இமை மூடும்
குளிரோடை..
காமன் மலர் தோட்ட
மணவாடை..
இதழ்களின் இடையினில்
இதமான தேன் விழும்
இரவுகள் விழித்திடும்
இளமகள் தேருலா
கைகள் அணைத்திட
உனைத் தொட
குனிந்திடும் முகத்தினில்
மோகம் வந்து சேரும்..
பளிச்சிடும் முழு நிலா.....
2 comments:
அருமையான கவிதை .. வாழ்த்துக்கள்
நன்றி சரவணன்
Post a Comment