என் காமத்தின்
இடைவெளிகளை
காதலின்
படுதோல்விகளை
நீ நெருங்கிப் பழகிய.....
அர்த்தநாரீசம்,
இவையெல்லாம்
இன்னும்
நானும் நீயுமாய்
இருப்பது போன்று
தோத்தரவாக்குகின்றது.
காலத்தின்
காவல் அறைக்குள்-நான்
வாழவும் சாகவும் -முடியாமல்
வானத்தின் கோலங்களாய்-என்
வசந்தங்கள் தொலைந்தும்
நீயும் நானும் இருந்த
நினைவுகளின் ..
மாத்திரைகளுடன்
இன்றோ நாளையோ
என்றோ என்று
நானும் மனிதனாய்....