ADS 468x60

26 September 2011

யாழ் இசை வாணி.

பெரிய சமுத்திரத்தினை கிழித்து வரும் வெள்ளலைபோல் மனதில் பிரபாகித்த மகிழ்சிகள் ஒன்றா! இரண்டா! நெடு நாள் ஆசையின் நிறைவேற்றமாய் கூழாங் கற்களுக்கிடையே மாணிக்கம் போல் பாடும் சின்னக் குயில், நாதங்களின் பள்ளிக் கூடம், வேதங்களின் இசை கோலம், கீதங்களின் சொந்தக்காறி, வடக்கின் இசை வசந்தம், யாழ் வாணி 'ஆதித்தியா' பழிச்சென என்னை பார்த்து சிரிக்கிறாள். 

கண்டேன் கலை முகத்தினை ஆச்சரியத்தோடே, முழுசாய் இருந்த நான் தலை கால் புரியாமால் முக்காலாய் போனேன். 'நீங்கள் ஆதித்யாவா மா' என்றேன.

பட்டதாரிகள் படும் பாடு...



உலகத்தில் பொருளாதாரத்தில் வழர்ந்த காடுகள் எல்லாம் வாழ்வாதாரத்தில் தன் நிறைவுகண்டமையால் தான் என்பது வரலாறு. வாழ்வாதாரம் வளர வளங்கள் தேவை, வளம் இருந்தும் வளர முடியாத பல நாடுகள் இன்றும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முடியாமல் போகின்றது. இலங்கை இதற்கு ஒன்றும் சளைத்தது அல்ல. பொருளியல் கூறும் குறை; வறுமை, குடிநீர்ப்பற்றாக்குறை, வேலையின்மை, குறை வருமானம், உணவுத் தட்டுப்பாடு, அரசியல் ஸ்த்திரமின்மை, கடன் சுமை போன்ற இன்னோரன்ன.

கொழும்பின் சந்து பொந்துகள் எல்லாம் வந்து நிரம்பிய பட்டதாரிகள் பட்ட பாடுகள் பார்த்தேன், குழந்தையுடன் பல பெண்கள், குடுப்பத்துடன் சில பேர்கள், வலம் இடம் தெரியாமல் வந்திறங்கியோர் ஒரு தொகை, பஸ்சில் பயணம் செய்து இறங்குமிடம் துலைத்தோர் எத்தனைபேர், கண்விழித்து வந்து புண்பட்டோர் ஒரு புறம், பயணப்பை துலைத்து பரதவித்தோர், மொழி தெரியா முழிச்சவர்கள் என்று வேலை தேடி வேர்த்துப் போனவர்களை  எம் திருநாட்டில் பார்த்தேன்.

ஒருவர் கூறினார்

22 September 2011

முரண்......


நியாயம் அநியாயம் எல்லாம் இப்போ கதைக்கப்படுவது குறைந்துவிட்டது. கலியுகத்தில் நடப்பதெல்லாம் அநியாயம்தான், அல்லாது நன்மை செய்பவன் நாதியற்றுதான் கிடக்கிறான். இருப்பினும் எச்சசொச்சமாக நன்மை செய்பவர்களும் உளர். 

உள்ளம் என்பது ஆமை அதில் 
உன்மை என்பது ஊமை 
சொல்லில் வருவது பாதி 
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி.

ஆதலால் உள்ளம் ஆமைபோல் எல்லாவற்றயும் உள்ளே இளுத்து அடக்கி வைத்திருக்கிறது கண்டு கொள்வது சிரமம். நெஞ்சில் என்ன இருக்கிறது என்பதனை வாய் வார்த்தைகளை கொண்டு அறிய முடியவில்லை, நாடகமேடையில் நடிக்க வந்தவர்கள்போல் யதார்த்தத்துக்கு மாறாக நடிக்கிறவர்கள் அநேகம் அநேகம்.

03 September 2011

அதிர வைக்கும் ஆதித்யா குட்டி.

உலகத்தில் மிக விரும்பப்படுவது சிறுவர்கள் அவர்களுடைய ஆக்கங்கள், செயற்ப்பாடுகள் அதுபோல் எல்லாமே. என் வாழ் நாளில் ஏன் எல்லோரது வாழ்விலும் இந்த அளவுக்கு கவர்ந்த திறமையான அழகான செல்லக் குழந்தை ஆதித்யா என்று சொன்னால் அது ஒன்றும் மிகையல்ல. ஆதித்யா குட்டி உங்களுக்கு எனது தெய்வத்தின் ஆசீர்வாதம் என்றும் இருக்க வேண்டுகிறேன். 

சக்தி தயாரிக்கும் நிகழ்சிகள் அனைத்தும் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை;   இருந்தும் சக்தியின் யூனியுர் சுப்புர்ஸ்ரார் நிகழ்ச்சியில் என்னை கவர்ந்த தெய்வக் குழந்தை ஆகித்யா தான்.

என்ன அசத்தலான குரல், என்ன அடக்கம், என்ன மரியாதை, ஞானம் இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய வளத்தை இறைவன் அவளுக்கு கொடுத்து இருக்கிறான் வார்த்தைகளில் சொல்ல முடியாத திறமைசாலி. எனக்கு இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளில் மிகப் பெரிய ஆசை ஆதித்யாவை சந்தித்து நேரில் ஒரு பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசிப்பதுதான்