விடியலே
நீயும் ஓர வஞ்சக்காரனா!
உனைக் கண்டு
மொட்டுக்கள் சிரிக்கினறது
சிட்டுகள் களிக்கின்றது
எனக்கு மட்டும் ஏன்- நீ
தூரத்தில்...
எரிமலைபோல் பொங்கி
உரிமை உரிமை என்று
ஊர் அதிர நடித்து
பொய் உரைத்து,
எம் தமிழர் முகத்தில்
கரி இறைக்கும்
அரசியல் இருளில் நானும்
விடியலே...
எனக்கு மட்டும் ஏன்- நீ
தூரத்தில்...
1 comments:
Oh Nantry
Post a Comment