ADS 468x60

21 November 2011

இது உந்தன் நாடே


ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா

அன்று யுத்தத்தின் அடி
இன்று வறுமையின் பிடி
இதுதான் உந்தன் வாழ்வா
உந்தன் குருதியில் உறுதியை
ஊட்டிடடா தமிழா

வழி இன்று தெரிகின்ற போது
விழி மூடி தூங்குவதா நீ
எல்லோரும் மன்னர்கள் தானே
ஏன் இன்னும் சேவகம் உனக்கு

ஏரு பூட்டி மாற்றான் வாழ
சோறு கொடுத்த எம் தமிழா
தேர்தல் மட்டும் நமக்கோர் வழி
நினைவில் வையடா

நிலத்தை நீ இழந்து விட்டாய்-நீர்
புலத்தை நீ இழந்து விட்டாய்
உயிரை நீ இழந்து விட்டாய்- சொந்த
உறவை நீ இழந்து விட்டாய்

சொந்த கடலில் மீன்பிடியை இழந்தோம்-
நெடும் காடு வீடுகளை இழந்தோம்
பசு மாடுக் கூட்டங்களை இழந்து
பள்ளிக் கோயில் சுகங்களை இழந்து
வெல்லும் வீரம் இருந்தும் மானமும் இழந்தோம்

ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா

தூரம் தனைக் கடந்து விட்டோம்
பாரம் தனை சுமந்து விட்டோம்
பொய் சொல்லி எம்மினத்தை- முள்
புதரின் நடுவே தள்ளி விட்டார்

இனி வாழ வளி இல்லை எமக்கு
ஒரு வாக்கு பலமிருக்கு உனக்கு
உனை ஆள ஒருவனை தெரிந்து
உலகெங்கும் பறை சாற்ற தமிழை
எமக்கே உரிய உரிமை பெற்று வாழ

ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா

2 comments:

Philosophy Prabhakaran said...

யப்பா... புல்லரிக்கிறது...

S.T.Seelan (S.Thanigaseelan) said...

Thanks Nanpa

Post a Comment