ADS 468x60

08 July 2012

இருட்டினில் தொங்குகிறாய்


திரும்பிப் பார்!!!; 
உலகம் உன்னை விட்டு
எங்கோ போயிற்று...
நீ....
தாய் மொழியை மடியில் கட்டி
சாதித்தது என்னவோ!!!
அரச தொழிலை நம்பியே- உனக்கு
அரை வயசு போயிற்று...

மாதங்கள் மலையேறி
நாட்கள் நடைகட்டி
மணித்தியாலம் மறைந்துபோய்
நிமிடங்கள் நிலையில்லாது
கணப்பொழுதில் உலகை அறியும் 
கணணி உலகமடா

ஆனால்....
நீ இன்னும் இன்னும்...
வருடங்களை கையில் பிடித்து
இருட்டினில் தொங்குகிறாய்...

குருகுலக் கல்விக்குள்
ஊறிக் கிடந்தால்
உலகை மட்டும் அல்ல
உன்னைக் கூட வெல்லமாட்டாய்

2 comments:

Unknown said...

// தாய் மொழியை மடியில் கட்டி
சாதித்தது என்னவோ!!! // இது ஆதங்கமா ? ஆத்திரமா ?

S.T.Seelan (S.Thanigaseelan) said...

ஆதங்கம், ஏனெனில் எம் கல்வி சீர்குலைக்கப்பட்டதால் யார் யார் எல்லாம் இன்று ஏறிமிதிக்கிறார்கள் அதனால் ஆத்திரமும்கூட

Post a Comment