ADS 468x60

17 July 2012

நொந்த நீயும் சொந்தமாவாய்....


உனக்கீடு உண்டோ அழகு
செம்மண்ணும் பசும் புல்லும்
சிலு சிலுக்கும் நீரோடையும்
கனிச் சாரலும் களிக்கீறலும்
வயற்கீற்றும் வாய்க்கால்களும்
உரசி இம்மண் பட்டு நடக்காத கால்கள்
என்னடா கால்கள்....

உனக்கீடு உண்டோ அழகு...
கெழுத்தி கோர்வையும் கீரைக் கட்டும்
பழுக்கப்போட்ட மாங்காச் சாக்கும்
கிண்ண்காயும் பனம் பாணியும்
திராய்ச் சுண்டலுடன் விரால் மீனும்
உண்டு மகிழ கோடி இருக்கும்...
மட்டு மாநிலம் வந்து பாருடா...
நொந்த நீயும் சொந்தமாவாய்....

0 comments:

Post a Comment