ADS 468x60

28 August 2012

மனிதன் ஏன் மரமானான்


கடினமாய் உழைப்பவன் கொள்ளைக்காரன் -அதை
களவாய் எடுப்பவன் வெள்ளைக்காரன்
தனக்கென குவிப்பவன் வள்ளலாவான்-உலகில்
பிறர்க்கென வாழ்பவன் பிச்சைக்காரன்...

மனம் விட்டு பேசுபவன் மடையனடா-அதை
மறைத்தே பூசுபவன் கெட்டிக்காரன்
தினம் தினம் அழுபவன் ஏமாளி-இங்கு
திருடனாய் வாழுபவன் கோமாளி

ஏன் இறைவா காலம் தாழ்துகிறாய்??


இந்த நாட்களும் நகர்ந்து விடுகிறது
எல்லோரது விடுப்புக்களுடனும்
பதில்கள் இல்லாத கேள்விகளுடன் மட்டும்,
பழசாய் போகும் நானும்
என்னையும் என் பிறப்பையும்
பரிகசித்துக்கொண்டு இருக்கும் என்
இறப்புக்கு மட்டும் ஏன் இறைவா
காலம் தாழ்துகிறாய்???

புன்னகைச் சொரியல் ,,

ன்னையும் புதிதாக்கும் 
இந்தப் புன்னகை
பொன்னையும் பொருளையும் இந்த
மண்ணையும் போ என்றது...
என்னே அதிசயம்

என் இறுமாப்புகள் 
இறுக்கங்கள் கூட-இந்த 
புன்னகைச் சொரியலில்
மறைந்து போனது.

கண்களின் நீரும் அர்ச்சனையாகும்


ஆசையில் கைகள்
அணைத்திடும்போது
கண்களின் நீரும் 
அர்ச்சனையாகும்
பேசிடும் வார்த்தை ஆறுதலானால் 
தூசிகளாகும் வேதனை யாவும்.

15 August 2012

நல்ல செயற்ப்பாடுகளை செய்யத்தொடங்கினால் தீய சிந்தனைக்கு இடமிருக்காது

Image may contain: outdoor and natureஎத்தனையோ விதமான வளர்ச்சிகள் முன்னெடுத்துச் செல்லவேண்டி இருக்கிறகு இன்னும் எமது மட்டு மாநிலத்தில்! இன்று உலகத்தில் சனத்தொகை அதிகரித்துவிட்டது, அதனால் நிலம் குறுகி ஜீவராசிகளுக்குகூட மேய்ச்சல் தரை இல்லாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலுக்கான நியாயமான விலை தளர்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பன காரணமாக பசுக்களைக்கூட விற்று தங்கள் புளைப்பை நடத்தவேண்டியவர்களாக மாறிவிட்டனர் மட்டக்களப்பு வாள் விவசாயிகள். 

11 August 2012

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார்? எதிர்பார்ப்பை கிழப்பியிருக்கும் தேர்தல் களம்


நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தல் வரலாற்று முக்கியம்வாய்ந்த போட்டி நிறைந்த ஒன்றாக இருப்பதனால்தான் கிழக்கின் அடுத்த முதல்வர் யார் என்கின்ற பெரிய கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இலங்கையில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அதிகாரங்கள் பரவலாக்கப்படும் நடை முறை இருந்து வந்தது. இதன் மூலம் அதிகாரங்கள், பொருளாதாரம், மற்றும் வளங்கள் நாட்டின் எல்லா எல்லைகளிலும் சமமாகக் கிடைக்கப் பெற 1978 ஆம் ஆண்டு யாப்பின் 13ம் இலக்கச் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை முறை சட்டபூர்வமாகக் கொண்டு வரப்பட்டது.. இலங்கையில் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் மாகாண சபைகளின் பின்னணி என்ன? அவற்றில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், அவை செயலற்று இருந்தமை, அதன்பின் நடத்தப்பட்ட தேர்தல்கள் மற்றும் இவற்றில் கிழக்கிலங்கையில் தமிழர்களின் நிலைத்து நிற்ப்பதற்க்கான தந்திரோபாய நகர்வுகள் என்பன பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

02 August 2012

அவுஸ்திரேலிய கனவில்..


ஆசை இன்று மனிதனை ஆட்டுது
ஆளம் அறிந்தா காலை நீ விட்டது
காசை உயிரை பணயமாய் இட்டது
காரியம் ஒன்றுமே இல்லாது வாட்டுது

பேரலை மீதொரு படகினை ஓட்டி
பேரெடுப்பேன் என்று ஊருக்கு காட்டி
பேதைபோல் பாதையில் இடையினில் மாட்டி
 பட்டதெல்லாம் துன்பம் மொத்தமாய் கூட்டி.