ADS 468x60

11 October 2012

நான் மகான் அல்ல..


என் வீட்டில் அழகாய் இருக்கும் ரோஜாக்கள் இல்லைதான் இருந்தாலும் வெள்ளை நிற மல்லிகை இருக்கிறது அது உங்களுக்கு சூடிக்கொள்ள முடியாவிட்டாலும் அது உங்களைப் பார்த்து புன்னகை செய்ய தவறுவதும் இல்லை, பூத்துக் குலுங்க மறப்பதும் இல்லை.

மகான்கள் நடப்பதை, நடக்கப்போவதை தெழிவாகக் கணித்துச் சொல்லுவார்கள், அறிவாலும் ஆனந்தத்தாலும் உயர்வாக இருப்பார்கள், மற்றவர்கள் என்ன தேவையை மனதில் நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை குறிப்பறிந்து உதவுவார்கள். ஆனால் நான் மகான் அல்ல வெறும் தொண்டன், தொண்டனுக்கும் தொண்டன். எனக்கு தெரிந்ததெல்லாம் நா நயமும் நாணயமும் தான், என் வாழ்க்கையில் பெரியவர்கள் இருந்து சிறியவர்கள் முதல் ஏமாற்றப்பட்டுள்ளேன் ஏன் என்றால் நான் மகான் அல்ல. ஆனால் இது வரை எனக்கு தெரிந்த வகையில் யாரையும் ஏமாற்றியதில்லை, ஆனால் என்வாழ்வில் நன்றியுடையவனாக இருக்க வேண்டும் என்று அதிகமாக ஆண்டவனிடம்தான் கேட்கிறேன் ஏன் என்றால் நான் மகான் அல்ல.

எனக்கு எதையும் தாங்கும் மனம் இல்லை, அதை வளர்த்துக்கொள்ள நான் முயற்சி செய்தும் தோற்றுப்போகிறேன் ஏனெனில் நான் மகான் அல்ல. மக்களோடு மக்களாக மக்களின் தொண்டனாக வாழ்ந்து போவதுதான்;; எனது சிறிய ஒரு நோக்கம்.  நான் யாரையும் தட்டிக்கழித்ததும் கிடையாது வெட்டி அழித்ததும் கிடையாது, என் வாழ்வில் உள்ள பெரிய பயம் நான் யாரை முழுசாய் நேசிக்கிறேனோ அவர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள் ஏனெனில் நான் மகான் அல்ல........

0 comments:

Post a Comment