ADS 468x60

31 December 2012

எல்லாம் போனதுதான் மிச்சம்


போ போ
இந்த பிறப்பில்
என்னை விட்டு
எல்லாம்
போனதுதான் மிச்சம்
உயிரை விட..

அதுவும்
இப்போ போகிறது..
நீ வீசிய
சொல் அம்பு
சொருகுண்டு

22 December 2012

இறுதி மூச்சில் வாழும் சொந்தங்களை தேடி ஒரு மனிதாபிமானப் பயணம்

இரண்டு உயிர்களை வெள்ளத்தில் காவு கொடுத்துவிட்டு ஏங்கிக் கிடந்த வேப்பவெட்டுவான் நலன்புரி நிலையத்தை நோக்கி மனிதாபிமான பயணம் ஆரம்பமானது. கன்றை இழந்த தாய்போன்று அங்கே வாடி நின்ற தாய்மாரும், சிறுவர்களும் எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொன்றாக கூறக் கேட்ட எங்களுக்கு அழுகையை விட ஆறுதல் ஒன்றும் இருக்கவில்லை.

'நாங்கள் இன்றுடன் வந்து ரெண்டு நாளாகிட்டு, உடுக்க உடுதுணியோ, படுக்க பாயோ ஒன்றுமில்லாமல் 8 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளோம். இஞ்ச 72 குடும்பம் (252பேர்) வேப்பவெட்டுவான், காரைக்காடு மற்றும் மாவடி ஓடை போன்ற ஊரில இருந்து வந்நிருக்கம், உம்மயா சந்தோசமா இருக்கு எங்கட புள்ளங்களுக்கு தேவையான பால்மா, சீனி, விஸ்கட்டு மற்றது தேயில அதோட கோதும மா, பருப்பு எல்லாம் அநாதரவா இருந்த எங்களுக்கு தந்து உதவி இருக்கிங்க நன்றி தம்பிமாரே' என்று குமாரி கனகசபை அழாக்குறையாகக் கூறினார்.

10 December 2012

மர்மம் என்ன??


08 December 2012

இலங்கைப் பட்டதாரிகள் படும் பாடு

சென்ற வருடம் கலாசார உத்தியோகத்தர் தெரிவுக்காக, கொழும்பின் சந்து பொந்துகள் எல்லாம் வந்து நிரம்பிய பட்டதாரிகள் பட்ட பாடுகள் பார்த்தேன், குழந்தையுடன் பல பெண்கள், குடுப்பத்துடன் சில பேர்கள், வலம் இடம் தெரியாமல் வந்திறங்கியோர் ஒரு தொகை, பஸ்சில் பயணம் செய்து இறங்குமிடம் துலைத்தோர் எத்தனைபேர், கண்விழித்து வந்து புண்பட்டோர் ஒரு புறம், பயணப்பை துலைத்து பரதவித்தோர், மொழி தெரியா முழிச்சவர்கள் என்று வேலை தேடி வேர்த்துப் போனவர்களை எம் திருநாட்டில் பார்த்தேன்.

03 December 2012

மட்டு மாநிலத்தின் பாரம்பரியத்தை காக்கும் வேட்கை - தீபத்திருநாள் களியாட்டம்.

 இற்றைக்கு முப்பது வருடத்துக்கு முன்பு இந்த மட்டு நகரம் இப்படியாகத்தான் கலையில் களைகட்டி இருந்தது. அதன் பிறகு காற்று மட்டும் போய்வருகின்ற வேற்று வாசிகளின் இடம்போல் ஆகிவிட்டது. இருந்தும் இன்று மெது மெதுவாக பசுமை பூண வைக்கும் நடவடிக்கையை செய்யவேண்டிய பொறுப்பு எம்மையும் சார்ந்து நிற்க்கின்றதல்லவா!. மட்டு மாநிலத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் தீபாவளித் திருநாள் பாரம்பரியத்தினை நிலைநாட்டும் கலை நிகழ்வுகளோடு தேத்தாத்தீவு திருவூரில் இனிதே நடந்தேறியது.