ADS 468x60

30 January 2013

வாழ துடிக்கும் வாகரை மக்கள்- மக்களின் குரலில்

(கட்டாயம் படியுங்கள்) இவர்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தார்கள்? இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? கடவுளே! உன் முன் பக்தனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். இவர்கள் கொலை செய்தார்களா? இல்லை கொள்ளையடித்தார்களா? இல்லை நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை செய்தார்களா? குற்றம் என்ன செய்தார்கள் இந்த மக்கள்  குற்றம் என்ன செய்தார்கள்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

29 January 2013

மட்டக்களப்பில் 40 ஆதரவற்றோர் இல்லங்கள்- நீளும் கருணைக்கரம்.

கிழக்கு மாகாணத்தின் யுத்தம், இயற்கை அனர்த்தங்களின் பின்னர் அநேகம் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் அதேபோல் அநேகம் பெண்கள் விதைவகளாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இறைவனால் படைக்கப்படும் யாரும் அநாதைகள் அல்ல, அவர்கள் இறைவனின் திருக்குழந்தைகள் என்பதை நிருபிக்கும் வண்ணம் இந்த மாவட்டத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில், இந்த குழந்தைகளை வழிநடாத்துகின்ற 40 சிறுவர் இல்லங்கள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு(http://hrcsl.lk/tamil/?page_id=813) அறிக்கையிட்டுள்ளது. 2012 இல் எழுதிய கட்டுரை ஒன்று

27 January 2013

இரக்கமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழர்கள் இருக்கவேண்டும்

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும், நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம். 

21 January 2013

மட்டக்களப்பு கிராமத்து மக்கள் எமது எல்லைத் தெய்வங்கள்!

மதுரன்குளம் , மாவடிச்சேனை, கட்டுமுறிவு, கதிரவெளி, வாகரை, வெருகல், ஓமடியாமடு, பனிச்சங்கேணி இத்தனை கிராமங்களில் இழையோடி கிடக்கும் வறுமை கல்வியை விளங்கச் செய்யாமல் போய்விட்டது. துடிப்புள்ள எந்த இன்னமும் சோத்துக்கு கஸ்ட்டப்படுவதில்லை. ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன், 'மட்டக்களப்பார் நீர், நிலம், காடு என்ற அனைத்து வளமும் நிறைந்த காணப்படுவதனால் உழைத்து உண்ண வேறு வழியை தேடவோ சிந்திக்கவோ இல்லையாம், ஆனால் யாழ் மக்கள் வரண்ட, நீர் நிலைகள் குறைந்த நில அமைப்பினைக் கொண்டிருப்பதனால் அவர்கள் விவசாயத்தினை நம்பி வாழ்பதனை விட, கல்வியை நம்பி முன்னேறத் தொடங்கினராம்'. ஆனால் கடந்து சென்ற கசப்பான வருடங்கள் மண்ணையும் வளப்படுத்தவில்லை, மக்களயும் வளப்படுத்தவில்லை என்பதுதான் மட்டக்களப்பினைப் பொறுத்தமட்டில் உன்மை.

13 January 2013

மட்டக்களப்பில் தை பிறந்தால் இவ்வளவு சந்தோசமா?

ஆகா, ஓகோ என்று களைகட்டியிருக்கும் மட்டக்களப்பு மாநிலத்தின் பொங்கல், மிகவும் சந்தோசமாகக் கொண்டாடப்படுகிறது. அனைவரும் ஆநந்தமாக மழைக்கு பின்னர் வெளித்திருக்கும் இந்த தருணத்தினை பயன்படுத்தி வீதிகள், சந்தைகள், கடைத்தெருக்கள் எல்லாம் குவிந்து நிற்க்கும் மக்கள் மகிழ்ச்சியோடு தயாராகி வருவதனை அவதானிக்க முடிகிறது.

08 January 2013

மாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாயம்.

மட்டக்களப்பின் முதுகெலும்பு என்பதனை விட, அதன் இருதயமாக இருப்பது அந்த மாவட்டத்தினை வளப்படுத்தும் மண்ணும் மனிதர்களும்தான். ஒரு பிரதேசம் வளர்ச்சி பெற வளங்கள் தேவை என்பது அபிவிருத்தியாளர்களது சிந்தனையாக இருந்து வந்தது. அது மனித வளம், மற்றும் பௌதிக வளம் என்ற இரண்டையும் குறிக்கும். ஆனால் இவற்றில் பௌதிக வளம் இல்லாமலேயே, மனித வளத்தினை மாத்திரம் உரமாக்கி அபிவிருத்தி கண்ட யப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் எம்முன் உதாரணமாக இருக்கும் போது, எல்லா வளமும் கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்டம் இன்னும் இன்னும் வறுமையில் முதனிலை வகிக்கும் மாவட்டமாக இருப்பது ஒன்றும் புரியாத புதிர் இல்லை.

06 January 2013

பருவம் கடந்து யோசிக்கிறேன்!


வீடு போ போங்கிறது ,
வயல் காடே என்னை
அணைத்துக் கொள்வாயா?

காற்றே உன்னை நேசிக்கிறேன்
மண்ணே உன்னை யாசிக்கிறேன்- உன்
அழகை தினமும் வாசிக்கிறேன்!
அதனால் இன்னும் வசிக்கிறேன்!
பருவம் கடந்து யோசிக்கிறேன்!
பச்சை நிலமே நேசிப்பாயா!!


01 January 2013

மட்டக்களப்பின் சுபீட்சமான பாதையை நோக்கிய ஏமாற்றங்களில்லாத ஆண்டாக மலர 2013ஐ வரவேற்கிறோம்

கடந்து வந்த கசப்பான பாதைகளின் பயணங்களை இன்னும் நாங்கள் ஒரு முன்னேற்றத்துக்கான வழிகளாக கொண்டு எங்களை நாங்கள் புதிதாக்கிக் கொள்ளவேண்டும்;. பரந்து கிடக்கும் வயல் நிலங்களும், மீன் பாடும் வாவி மகளும், கனிகள் கொட்டும் சோலைகளும், அலைகள் மோதும் ஆழ்கடலும் வருமானமும் வளர்ச்சியும் கொண்ட சமுகத்தை ஏற்ப்படுத்த போதுமான வளங்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருந்தும் இன்னும் எம்மக்களை எடுத்தேத்தும் உணர்வுள்ள, தொண்டுள்ளம் கொண்ட, மனிதாபிமானமான ஒரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்கின்ற உறுதிமொழியே இன்று எம் சமுகத்தின் முன் நிற்க்கவேண்டும்.

இல்லாமை நீக்க வேண்டும் 
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்