ADS 468x60

27 January 2013

இரக்கமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழர்கள் இருக்கவேண்டும்

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும், நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம். 

'நான் மனச் சுமையோட என்னையும் சுமந்து யாருக்கும் பிரயோசனம் இல்லாம இருக்கிறனே என்று வேதனைப்பட்டேன். இத்தனை வயசுபோயும் இந்த கம்பில் தான் நான் நடமாடுகிறேன். இருப்பவங்களுக்கு எல்லோரும் உதவுவார்கள் இல்லாதவர்க்கு யார் உதவுவார்கள் என இருந்தேன். பெரிய மனசு படைத்த நீங்க நல்லா இருக்கணும், நான் இனி இல்ல என்ட மகிழ்சி அடையிறன். இந்த சைக்கிள் கிடைச்சது எனக்கொரு வரம்போல இருக்கு மகன். இனி என்னால சில சில உதவிகள செஞ்சு மற்றவங்களுக்கு பிரயோசனமா இருப்பன். நன்றி மகன்' என கண்ணீரால் அர்சித்தார் மனோகரன் அவர்கள்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ளள சமூக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நலன் விரும்பிகளின் நிதியுதவி மூலம் நடக்க முடியாமல் உள்ள விசேட தேவையுடையோருக்கான முச்சக்கரவண்டிகளும், தையல் பயிற்சிநெறியினை பூர்த்திசெய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது. குறிப்பாக  இந்த நிகழ்வினை சிறப்பிக்க  எமது மட்டக்களப்பு  குழுமத்தின் ஒரு பெரிய பங்களிப்பாக இங்கு ஒரு மூன்று சக்கர விசிக்கள் வண்டி ஓன்று வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு இராமகிருசன மிஷன் சுவாமி அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. "இரக்கமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழர்கள் இருக்கவேண்டும். அதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழவேண்டும்" என இந்த நிகழ்வில் சுவாமிகள் பேசினார்.

"கடவுளை தேடி ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை நீ, ஏழைகளுக்கு உதவும் போது அவர்களது முகத்தில் கடவுளைக் காண்பாய்" என விவேகாநந்தர் கூறியதற்க்கிணங்க நாங்கள் கடவுளை இவர்களது முகத்தில் கண்டோம்.  

மூன்று சக்கர உந்துருளி ஒன்றை அம்பிலாந்துறையில் இருந்து வருகை தந்திருந்த திரு தம்பிராசா மனோகரன் அவர்களுக்கு எங்கள் குழுமத்தின் சார்பில் வழங்கி வைத்தேன். இந்த  உதவி உன்மையில் காலத்தின் தேவை அறிந்த பொருத்தமான உதவி. 



இதற்கு நிதியுதவி அளித்த திரு அன்ரன் ஜெசன்வி அவர்களுக்கு எங்கள் குழுசார்பில் மனமார்ந்த  நன்றியை நவில்கின்றோம்.மட்டக்களப்பில் மனிதர்களைப் போலவே இந்த மண்ணும் கொடிய யுத்தத்தினால் ஊனமுற்றுக் கிடக்கிறது. இருந்தும் அவற்றை முண்டுகொடுத்து உதவ வரும் அன்பு உள்ளங்கள் இன்னும் எம்மத்தியில் இருப்பதனை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.

0 comments:

Post a Comment