ADS 468x60

04 February 2013

சொர்க்கம் அல்லவோ...













மட்டு நகர் நம் மக்கள் விரும்பும்
அழகான நிலமல்லவோ
வான் மேகமும் மலைச் சாரலும்
ஒன்றாகி கூடிடும் மேடை அல்லவோ.

கயல் பாடிடும் வயல் ஓடையில்-எந்தன்
நெஞ்சம் பட்டு சொட்டு தாலாட்டுது
முயல் பாய்ந்திடும் முல்லைக் காடுகள்-சொட்டு
தேனை மொட்டு விட்டு பாலூட்டுது
என் மண்ணே உன்னைத் தான்- விட்டு
பின்னே போகுமா
மனம் தேடி அலைகின்றதே
இந்தக் காற்றிலும் இன்ப ஊற்றிலும்
நாம் வாழும் வாழ்க்கை சொர்க்கம் அல்லவோ


கலை ஊறிடும் கங்கை ஓடிடும்-கண்கள்
பார்க்கும் இடம் எங்கும் பொங்கும் இன்பமே!
அள்ளும் பாத்திரம் மெல்ல ஊறிடும்-வளம்
எங்கும் பூப்பதை நான் பார்க்கிறேன்.
இங்கு வந்தோர் சொந்தமாய் -ஒன்றாய்
வாழும் வண்ணமாய்
பண்பான நிலம் அல்லவோ!
எந்த நேரமும் இந்தப் பூமியில்
ஒன்றாகும் சொந்தம்  கோடி அல்லவோ!



2 comments:

எஸ்.மதி said...

மண் வாசம் மணக்கிறது வாசித்த பின்னும் நெஞ்சில்..
வாழ்த்துகளுடன் மதி..

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி மதி

Post a Comment