ADS 468x60

07 July 2013

கண்ணே கண்ணே மட்டு மண்ணே !!

கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன

தேனே தேனே எங்கும் விளையும் காடு
தென்றல் உலவும் வீடு
மீன்கள் பாட்டிசைக்க மான்கள் அசைந்தோடும்
மேனி அழகு நாடு- வாவி பழகும் பாரு

மெது மெதுவாக சூரியனும்
மேகத்தினூடே விரிகிறதே
எதுவந்த போதும் எமக்கெனவே
எதிர்காலம் கண்ணில் தெரிகிறதே

சாந்திகெட சத்தமிடும்
சமுகத்தை மேடையில் தூக்கிடுவோம்
ஏந்திநிற்கும் கரங்களெல்லாம்
ஏர்பிடிக்கும் கரம் ஆக்கிடுவோம்
திருநாள் வருநாள் தெரிகிறதே

கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன

0 comments:

Post a Comment