ADS 468x60

14 September 2013

ஒரு கிராமத்து காத்து

மண்டூர் வருக்கன் சொழயே  உன் மம்மி எந்தஊரு
வாவிமகள் பாடும் நாடா  வந்தூh கேக்கிறேன்.
நீ வாவிமகள் பாடும் நாடா வந்து கேக்கிறேன்.

சோலையூர் சிவன் தேரு உன் சொந்தம் இங்கயாரு
சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்
நீ சொல்லடி கல்லடிப் பாலம் சென்று நோக்கிறேன்

காரைதீவுப் பொண்ணப் போல காரமாகப் பார்கிறாய்
போரதீவு பாலப் போல பொங்கிவிட்டு போகிறா
தேத்தாத்தீவு கலையப் போல பாத்தாநீயும் கலக்கிறாய்
புளியந்தீவு கோட்டை யாட்டம் நெஞ்சிக்குள்ள பூட்டுறா
நீ எனக்கு இல்லைஎன்றால் அச்சொடைஞ்ச சில்லு சில்லு
நீ சிரிச்சிப் போனாப்போதும் மப்புஏத்தும் கள்ளு கள்ளு

வெல்லாவெளி வெள்ளாம போல் தலகுனிஞ்சி போகிறா
வாழச்சேனை கடதாசி போல் இடைமெலிந்து இழுக்கிறாய்
கதிரவெளி சோளன் குலையே கண்டமெல்லாம் மணக்கிறாய்
கன்னங்குடா கூத்தப் போல கண்டபடி ஆட்டுறா
காதல் கடல் தாண்ட நீதான் மட்டக்களப்பு வெளிச்சவீடு
கண்ணிரண்டும் ஒன்னத் தேடும் காதறுந்த தோடு தோடு

0 comments:

Post a Comment