ADS 468x60

14 September 2013

மீன்பாடும் தேநாடு வாருமையா


மீன்பாடும் தேநாடு வாருமையா-எங்க
மேலான பண்பாட்டை பாருமையா
தேனோடு பால்தயிர் சேருமையா-நம்ம
தேமதுர தமிழ் ஊறுமையா

நெஞ்சினில் வஞ்சகம் இல்லையையா-எங்க
நிலத்தினில் பஞ்சமும் இல்லையையா
கெஞ்சாமல் தஞ்சமும் கிடைக்குமையா- இரந்து
கேட்போர்கு அமுதள்ளி படைக்குமையா

இல்லாதோர் இல்லாமல் செய்வோமையா-இங்கு
இருக்கின்ற பேதத்தை கொய்வோமையா
கல்லாமை இருள்நீங்கி உய்வோமையா- நம்ம
காலத்தில் உறவினை நெய்வோமையா

0 comments:

Post a Comment