ADS 468x60

26 September 2013

இனங்களால் ஒன்றாகத் துடியடா

தாகத்தில் தண்ணீரை குடியடா
தலைகீழாய் போவதும் குடியடா
ஒன்றாகச் சேர்ப்பதும் குடியடா
ரெண்டாக பார்ப்பதும் குடியடா

கோயிலில் கும்பிடக் குடியடா
குயவர்கள் பறயர்கள் குடியடா
திருமணம் செய்திடக் குடியடா
இருமனம் பிரிப்பதும் குடியடா

மனிதனில் வேறில்லை படியடா
மதங்கொண்ட மாந்தரை அடியடா
இனங்களால் ஒன்றாகத் துடியடா
இல்லாடடி இருந்தென்ன மடியடா-நீ
இல்லாடடி இருந்தென்ன மடியடா

0 comments:

Post a Comment