ADS 468x60

23 August 2014

நீ மட்டும் ஏன் கோபிக்கிறாய்!

மழைமேகம் நீரள்ள கடலுக்கு கோபமா
மலைமுகடு கூந்தல் காய காற்றுக்கு கோபமா
உலைமூட்ட எரிவதனால் நெருப்புக்கு கோபமா
மதிவளர்ந்து எறிக்கிறதே வானமே கோவமா
மரமூன்றி வேர்விட்டால் ம
ண்ணுக்கு கோபமா
மனம்மயங்கி இடங்கேட்டால் பெண்ணுக்கு கோபமோ!

மூடுவதால் கண்ணுக்கு கோபமா!
பாடுவதால் இசைக்கு கோவமா!
ஆடுவதால் காலுக்கு கோபமா!
ஓடுவதால் கங்கைக்கு கோபமா!

மலர்ந்து மலர்ந்து மணந்து மணந்து
உலர்ந்து போகுதே மலருக்கு கோவமா!
வானத்தில் திங்கள் வந்தால்
இரவுக்கு கோவமா!
வார்தையில் பங்கம் வந்தால்
வாய்கு கோவமா!
நீயும் நானும் சண்டையிட்டால்
காலத்தின் கோபமா!!!, சாபமா இல்லை பாவமா!!!!

0 comments:

Post a Comment