ADS 468x60

30 August 2014

இது முல்லை வேளை


தங்கம் கலந்த மணல்- அருகே
தாலாட்டும் வங்கப் புனல்
கூட்டமாய் வரும் மீன்கள்- அதை
நோட்டமிடும் மீனவர் கண்கள்
மயிலிறகாய் வருடும் தென்றல்- இது
வருவோர்க்கு வாய்த்த முன்றல்
சூரியனைக் குழைத்து எறிந்த வானம்
நீள் பனைகள் ஒட்டடை துடைக்க
நிலா வருகைகண்டு
உலாவும் பறவைகள் கானம்
இந்த வேளை நமக்கெல்லாம்
பொது உடமைதான்
ஆனாலும் மாற்றான் வீட்டு
மல்லிகைப்போல் இன்னும்
வேலிகள் கடந்து நிற்கும்
வேரற்ற எம்மக்கள்.

0 comments:

Post a Comment