ADS 468x60

16 September 2014

மண்ணில் பிறந்தாலே

மன்னவனானாலும் மாடோட்டும் சின்னவனானாலும்
மண்ணில் பிறந்தாலே மறுபடி மண்ணுக்கிரைதானே!!

உன்னில் இருப்பானடா இறைவன் என்னிலிருப்பானடா
எண்ணி உதவிசெய்தால் அதுபோல் இன்பங்கள் வேறுஉண்டோ

சட்டம் படித்தாலும் பெரிய பட்டம் கிடைத்தாலும்
இட்டதே சேருமையா இதற்குள் எத்தனை பேதமையா

கூழ்காச்சி கொடுக்கிறான் அவனே ஆள்வைச்சிம் அடிக்கிறான்
வீழாமல் வாழ்வதுபோல் காட்டியே பாழாகிபோவதைப் பார்.....