ADS 468x60

27 October 2015

நல்லாட்சியில் கிடைத்த மழையோ!

மடை உடைக்கும் வெள்ளம்
நிரம்பியது பள்ளம்
நாட்டிலேதோ பிழை
நாளெல்லாம் மழை
கூழுக்கும் இல்லை வழி
கூறுவது யாரைப் பழி
மறுகாமறுகா பெய்யிது காட்டில்
மக்களெல்லாம் முடங்கினர் வீட்டில்
ஒரே இதுதான் வேலையாப் போச்சி
ஒழிப்பது எப்படி வறுமையை ஆச்சி
தோட்டமும் தொரவும் எங்களுக்கு ஆதாரம்
கிடைக்குமா வெள்ளத்தில் போன சேதாரம்
நாங்களும் நினைத்தோம் இது
நல்லாட்சியில் கிடைத்த மழையோ என்று
முள்ளிவாய்க்கால் முற்றுகைபோல்
அள்ளி வருகிறது ஆத்துவெள்ளம்
தவிர்க்க முடியாத ஒன்று
தவிக்கும் மக்களை நாம்தான் பார்க்கனும்
நேர்த்தியான தகவல் தேவை- அது
நேர்மையாய் உதவி அளிக்கும்

0 comments:

Post a Comment