ADS 468x60

04 December 2015

என்னை உலுக்கிய செய்தி!

















என்னை உலுக்கியது சென்னைச் செய்தி!
விண்ணை பிழந்த மழை
மண்ணை இழுத்துப் போகுது
"கூவங்களை கழுவி
குடியிருப்புகளை கூவமாக்கியுள்ளது"


பாவம் இந்த சனம் என்று
பருவ மழை விட்டிடுமோ!
மோகம் அதற்கு அதனால்
தாகத்தோடு தவிக்கவிடுகிறது.
கட்டிடங்களைக் கட்டி
குட்டை குளங்களை மூடி
காடுகளை அழித்து
வீதியும் வீடுமாக்கி
மேடுகளை பள்ளமாக்கி
பள்ளத்தை வெள்ளமாக்கி
இயற்கையை அடைக்க
இடம்பிடித்தான்- இன்று
மனிதனை இயற்கை அடைத்துள்ளது.

0 comments:

Post a Comment