ADS 468x60

24 March 2016

யார் சொந்தக்காரன்?


கொம்புச்சந்திக் கோயில்- எங்க குடியிருப்பு வாயில் இங்கு எத்தனைபேர் சொந்தக்காரன் எத்தனைபேர் உறவுக்காரன் சொல்லுகிறேன்.......

உடைக்கவென ஊற்றெடுத்து –ஆலயம் படைக்கவென ஏற்றம்கொண்டோர், கட்டவைத்த வீட்டுக்கல்லை ஒட்டுமொத்தமாய் கொடுத்தவர்கள்! மண்ணையெல்லாம் கொண்டுபோய் மனமுவந்து கொடுத்தவர்கள், உண்ண உணவு கொடுத்து உள்ளிருந்து உதவிசெய்தோர், வர்ணம் பூசவென லெட்சமாய் வாரிவாரிக் கொடுத்தவர்கள், வேலைக்கு போகுமுன்பே வெண்சாந்து குழைத்தவர்கள், தேனீரும் சிற்றூண்டியும் தேவையறிந்து கொடுத்தவர்கள் இவர்கள் ஆலயத்தின் உரித்துடையவர்கள்.

 வாசலில் உயர்ந்த மரத்தை வரும்போது அறுத்துக்கொடுத்தோர், ஆசையில் சேர்த்த செம்பையெல்லாம் ஓசைமணி செய்ய ஒப்படைத்தோர், வெய்யிலில் கருகி பனியில் உருகி வெளிநாட்டு வேதனங்களை வேளையறிந்து கொடுத்தவர்கள், ஊரூராய் சென்று ஊக்க நிதி திரட்டியோர், அல்லும் பகலும் நின்று கல்லும் மண்ணும் சுமந்தவர்கள், பாடல்கள் படங்கள் செய்து- உலகில் பறை சாற்றியவர்கள் வரி என்று உணராமல் வரும்போதெல்லாம் கொடுத்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து விக்ரகங்கள் தருவித்தோர் இவர்கள் ஆலயத்தின் சொந்தக்காரர்கள்.

பேசாமல் இருந்துகொண்டே பெரிதாய் பணங்கொடுத்தோர், அரை நேர உணவு உண்டு அனைத்தையும் கொடுத்வர்கள், அயலூரானாலும் அனுசரனை தந்தவர்கள், ஒலிபெருக்கி எடுத்து உன்மை நிலை விளம்பியோர், எலிவாகனன் மீது என்றும் மறவா பக்திகொண்டோர், குறைந்த விலையில் கோயில் கட்ட கூடிய பொருள் கொடுத்தோர், நிறைந்த பெருமானுக்கு நீண்டுயர மனத்தோடு அடிக்கல் இட்டோர், சட்டச் சிக்கல்களை சடுதியில் முடித்துக் கொடுத்தோர்- அபிவிருத்தி திட்டங்கள் வரும்போது தேனூருக்கு உதவியவர்கள் இவர்கள் உரிமைக்காரர்கள்.

கம்பு சுமந்தவர்கள் கலை செம்பில் படைத்தவர்கள் சிற்ப்பம் செதுக்கியவர் சிலை நுட்பம் விளக்கியவர், ஓவியங்கள் வரைந்து காவியம் படைத்தவர்கள், மின்சார உதவி செய்து மின்னொளி பாச்சியோர், ஏற்றி இறக்கவென இயந்திரங்களை கொடுத்தோர், இலகுவாக்க சிலவற்றை எடுத்துரைத்து தீர்த்தோர், உலகமே தடுத்தபோதும் உலங்கு வானூர்தி வருவித்தோர், எங்கிருந்தபோதும் வந்து ஏலுமான உதவி செய்தோர், இந்த ஆலயம் உயர மனிதர்கள்  மாத்திரமல்ல மாடும் வயலில் உழைத்தன இவங்கபோல இன்னும் இருக்கிறார்கள் பங்கு கேட்க தகுதியுடை சொந்தக்கரார்கள் பரவி நிதம் தொழும் உரிமைக்காரர்கள். 

நன்றி சொல்ல இருக்கு இன்னும் ஆயிரம் -அதற்கு நான் எழுத வேண்டும் தொண்டர் பாயிரம்

இவர்கள் தொண்டு வளம்பெறட்டும்
இவர்கள் குடும்பம் ஆசீர்பெறட்டும்
இவர்கள் எதிர்காலம் சுபீட்சமாகட்டும்
இவர்களது பக்தி சிறக்கட்டும்
என இறைவனை இறைஞ்சிகிறேன்

13 March 2016

நண்பர்களுக்கு பெரிய மதிப்பு இருக்கும்!

சில சமயம் சிலரைப் பார்த்தால் ஆத்திரம் வரும் சிலரைப்பார்த்தால் பரிதாபம் வரும், எனக்கு யாரைப்பார்த்தும் ஆத்திரம் வருவதில்லை, அப்படி வந்தாலும் யாரையும் நோகடிப்பதில்லை. உங்களுக்கு தெரியும், சிலர் காரணம் இல்லாமலேயே மற்றவங்க மேல பழியப்போடுவாங்க, அதுக்கு பயந்து எதிர்க தெரியலன்னா போச்சி, சங்குதான்!! மல்டி வரல்போல தொடந்து அடிப்பாங்க. ம்ம்ம்... ஒரு காலத்தில செய்யாத குற்றங்களுக்காய் சரசரப்புக்கெல்லாம் பயந்து நடுங்கி இருக்கிறன் அது ஒரு காலம். அப்போ எல்லாம் இந்த 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' இதெல்லாம் ஞாபகம் வந்ததில்ல. 'தருமம் தலைகாக்கும்' அது மட்டும் இருந்திச்சி.

கொம்புச்சந்தி கோயில்: சமுதாய பல்கலைக்கழகமாய் திகழும் ஒரு நிறுவகம்

மட்டக்களப்பு தமிழகத்தை ஒருங்கே பிரதிபலிக்கும் பழந்தமிழ் கிராமம் தேற்றாத்தீவு எனும் தேனூராகும். மட்டக்களப்பின் பெருமையும் பழமையும் மிகுந்த கிராமங்களுள் ஒன்றுதான் தேற்றாத்தீவுக் கிராமமாகும். இங்கு வாழுகின்ற மக்களின் வந்தோரை வாழவைக்கும் பண்பு, கலைகளை பேணிவளர்க்கும் திறமை, வீரசைவம் செறிந்த இடம், சித்தர்களும், கவிஞ்ஞர்களும், கலைஞர்களும் நிறைந்து உருவான இடம், கடலும் ஆறும், குளங்களும் சூழ வயல் வனப்புகள் வளம் கொஞ்சும் நாநிலம் போன்றவை  எமது ஊர் ஏனைய ஊர்களைவிட தனிப்பண்புகளுடன் இருப்பதற்கு காரணங்களாய் அமைந்துள்ளன.

11 March 2016

இது மனிதர்களுக்கு, எருமைகளுக்கு அல்ல

படிப்பு பட்டம் எல்லாருக்கும் வாய்க்கிறது இல்ல, அது வாய்த்தவங்க எல்லாருக்கும் பயன்படுறதும் இல்ல. என்னங்க நான் பாத்த பலபேரு எப்படி படிச்சாங்க? யாரு படிக்க உதவினாங்க?  எதுக்கு படிச்சம்? என்ற கேள்விகள தங்களுக்கு தாங்களே கேட்டுகொள்றததே இல்ல. இவங்க தங்களுக்கு மண்டியிடணும், அவங்க சொல்றத கேட்கணும் என்ற வர்க்கத்த எதிர்பார்க்கிறாங்க அதனால அவங்களுக்கு இயல்பாகவே இருக்கும் அழகு, மதிப்பு, பெருந்தன்மை எல்லாத்தையும் அவங்களுக்கு தெரியாமலேயே படிப்படியா எழந்திடுறாங்க. 

அறிவும் திறனும் பதவியும் வந்து சேரும்போது தலை கனக்கக் கூடாதுங்க. நெல்லப் பாருங்க கதிராக வெளிவரும்போது உள்ள ஒண்ணுமே இராது ஆனா ஆது நீண்டு வளர்ந்திருக்கும். அதன்பிறகு அதில பால் ஏறி பின் காயாகி முத்தி பழுக்கும்போது பாருங்க தலை குனிந்து நெல்லாக பயனை மட்டும் வாரித்தரும். அப்படிப்பட்ட மனிதர்கள இந்த கலியுகத்தில காணுறது மிக மிக அரிதுங்க. இன்னும் ஒன்று நம்ம மேல மற்றவங்க வைத்திருக்கிற அன்ப தராதரம் பார்த்து கணிப்பிடக்கூடாதுங்க அது திரும்பவும் நமக்கு மேல உள்ளவர்களால நாம வைத்திருக்கும் அன்பை புறக்கணிக்க வைக்கும் இல்லையா. //தலைக்கனம் இல்லாது வாழுவோம்//

04 March 2016

ஓங்கார முதற் பொருளே!

Vinayaka Chaturth pic
ஓம் என்னும் ஒலியுடையாய் ஓங்கார முதற் பொருளே ஓயாது உனைத் தேடி ஊள்ளமே உருகி நின்றோம் துயரத்தை செவி சாய்த்த தும்பிக் கை நாயகனே உயரத்தில் நீ இருந்து ஊர் எல்லாம் அருள்கின்றாயே ஓம் பிரணவனே சிவன் மகனே சரண் புகவே உன்னைத் தொழுதேன் அவ்வைக் அருள் பாலா அகந்தை கொன்ற தீரா அனைவருக்கும் அப்பன் நீதானே கலை ஊறும் தேன் ஊரில் சிலையாக உயர்ந்தாயே! கலி யுகத்தின் தெய்வம் எலியின் மீது ஏறி கவலை நீக்கும் அப்பன் வேறேது கணம் போற்றும் கருணை வள்ளல் இனம் காக்க எழுந்தாயே உள்ளம் உருகப் பாடு உணர்வு ஒன்றித் தேடு வள்ளல் பெருமான் முன்னே வருவாரே வளல் மிஞ்சும் வயல் ஊரில் வானம் கொஞ்ச அமர்தாயே!