ADS 468x60

04 March 2016

ஓங்கார முதற் பொருளே!

Vinayaka Chaturth pic
ஓம் என்னும் ஒலியுடையாய் ஓங்கார முதற் பொருளே ஓயாது உனைத் தேடி ஊள்ளமே உருகி நின்றோம் துயரத்தை செவி சாய்த்த தும்பிக் கை நாயகனே உயரத்தில் நீ இருந்து ஊர் எல்லாம் அருள்கின்றாயே ஓம் பிரணவனே சிவன் மகனே சரண் புகவே உன்னைத் தொழுதேன் அவ்வைக் அருள் பாலா அகந்தை கொன்ற தீரா அனைவருக்கும் அப்பன் நீதானே கலை ஊறும் தேன் ஊரில் சிலையாக உயர்ந்தாயே! கலி யுகத்தின் தெய்வம் எலியின் மீது ஏறி கவலை நீக்கும் அப்பன் வேறேது கணம் போற்றும் கருணை வள்ளல் இனம் காக்க எழுந்தாயே உள்ளம் உருகப் பாடு உணர்வு ஒன்றித் தேடு வள்ளல் பெருமான் முன்னே வருவாரே வளல் மிஞ்சும் வயல் ஊரில் வானம் கொஞ்ச அமர்தாயே!

0 comments:

Post a Comment