ADS 468x60

18 April 2016

நான் வேறமாதிரி!

நான் ஒன்றும் சுத்தமாய் இல்லை
ஆனால் நலம் வேண்டும் அன்பர்க்கு
நல்லதோர் பிள்ளை
பாரம் பரியமாய்ப் போனா
இன்று வேலையற்றவன் போல
பாக்குது வீணா

கைகட்டி வாழ்பவன் நானா
மூடர் கதை கேட்டு மூர்கமாய்
எழுகிதென் பேனா
இடர்பட்டு கிடப்போரின் ஆளு
என்னை எள்ளினால் தலை கொய்யும்
கூரான வாளு

யாரும் இல்லை என்னை அடக்க
வந்தால் வேறு முகம் கொண்டு
ஏறுவேன் முடக்க
பட்டி தொட்டி எல்லாம் திரிவேன்
அவர்கள் துன்பத்தை தலைக்கொண்டு
பழுதூக்கி முறிவேன்!

0 comments:

Post a Comment