ADS 468x60

01 May 2016

ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது!


முயற்சியாளர்களும், நிறைந்த வளமும் மட்டக்களப்புக்கு ஒன்றும் குறைவில்லை. இங்குள்ள வளங்களை மரபுரீதியாக உற்ப்பத்தி செய்வதில் இவர்கள் கில்லாடிகள், நல்ல கைவினைஞ்ஞர்கள். குறிப்பாக கணவன் மார்களை இழந்த அநேகம் பெண் முயற்ச்சியாளர்கள், இவர்கள் எதிர்நோக்கும் நேரடிப்பிரச்சினை தங்களது உற்ப்பத்திக்கு தகுந்த சந்தைவாய்ப்பு இன்மையும் முதலாளிகளின் சுரண்டலும்தான். 

வளங்கள் தொடங்கி உழைப்புகளும் இவர்களது நலிவுறு நிலையை சாட்டாக வைத்து சுரண்டப்பட்டுவருவது பொது. காரணங்களாக, இன்னும் மரபுரீதியான உற்ப்பத்திகளிலும் தொழில்நுட்பத்திலும் தங்கி இருத்தல், தகுந்த பயிற்ச்சி இன்மை, எதிர்மறையான மனப்பாங்கு, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி போன்ற இன்னோரன்ன காரணங்கள் இந்தப் பிரச்சினைக்கான நேரடியான காரணங்களாக இருக்கின்றன.

இப்படியே இருக்கும் இந்தக் குடும்பங்களின் நிலைமைதான் என்ன?? வறுமை, சந்தையில் போட்டியிட முடியாத நிலை, குறைந்த தரநிர்ணயனம், குறைந்த கேள்வி, ஏமாற்றம் என பல பிரதிபலன்களை ஏற்படுத்திவிடும் நிலையில் எம்மக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். உன்மையில் இவற்றுக்கு பல மட்டங்களில் பரிந்துரைகளை காண முயலவேண்டும், குறிப்பாக முதலீட்டாளர்களை இந்த முயற்ச்சியாளர்களை பயன்படுத்தி தரம்வாய்ந்த பொருட்களை அதிலும் குறிப்பாக உல்லாசப்பயணத்துறையுடன் ஒருங்கிணைந்தவாறு உற்பத்தியாகும் பொருட்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பினையும், நம்பகத்தன்மையினையும் ஏற்படுத்தும் முயற்ச்சிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். 

அத்துடன் நீண்டகாலத்துக்கு இவர்களை கண்காணித்து உற்பத்தியில் தொய்வினை ஏற்படுத்தாத ஒரு நீண்டு நிலைக்கும் பொறிமுறையை ஏற்ப்படுத்த வேண்டும் இவை மூலம் நிச்சயம் ஒரு நலிவுறுநிலையில் உள்ள சமுகத்தின் வாழ்க்கைத்தரத்தினை கட்டியெழுப்பமுடியும்.

"ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது? சில கோழை கும்பல் தான் வாழவேண்டி பேதங்கள் கொண்டாடுது!

0 comments:

Post a Comment