ADS 468x60

02 August 2016

மாமாங்கப் பத்து!

நான் மாமாங்கம் சென்று மனமகிழ்ச்சி கொண்டபோது அவரை நினைந்து பாடிய பத்து பாட்டு என் அப்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ம, மா, மி, மீ என ஒரே எழுதது வரிசையில் 10 பாடல்கள்!
மன்னனே நான் தொழும் கன்னலே- லோக மாமறையே மகிழ்ந்து ஒளிதரும் மின்னலே இன்னல்கள் எம்மினம் இழந்திட –வளத்தை ஈன்றவா மட்டில் வாழ் ஆண்டவா சுயம்பாக வந்தவா போற்றி- எமக்கு சுகமள்ளி வழங்கிடும் கணநாதா போற்றி! போற்றி!
மா மாமாங்கம் என்றொரு ஊரு- அங்கு மகிழ்ந்திட இயற்கைதான் பலவகை பாரு மன்னரும் தொழவந்த நாடு- தானே மனங்கொண்டு உறைந்திடும் இறைவனின் வீடு ஏமாறும் என்மனம் இருள்- அதில் எழுந்துநீ இறைவனே கருணையை அருள்!
மி மின்னலும் படராத காடு – அனுமன் மீட்டிட சீதையை தேடிய வீடு யன்னலாய் ஒளிதரும் கிழக்கு- அங்கு யாவர்கும் பிணிநீக்க அருள்வது வழக்கு என்னவா ஈசனின் முன்னவா- உடைந்து உழல்கிறேன் காத்திட ஓடிவா அப்பா
மீ மீன்மகள் பாடிட ஆடும்- தென்னை மேவிய வயலோரம் ஆறுகள் ஓடும் தேன்வதை பொங்கியே வழியும்-இந்த தேசத்தில் சிவம் வந்து பாவங்கள் அழியும் நான்பாட நல்வார்தை தந்தாய்-ஈசா நாள்தோறும் உனைப்போற்ற நாடுவேன் வந்து!
மு முன்கோபம் மயக்கம் மறதி- இன்னும் மூப்பையும் சாவையும் அறியாத பிறவி கண்கெட்டு மனம் செத்து உடைந்தேன்- உன்னை கண்டபின் பிறப்பினில் இல்லாத அடைந்தேன் என்அப்பன் என்தெய்வம் நீயே!- உன்னை எண்ணினால் இரந்தூட்டும் அன்பான தாயே!
மூ மூலாதாரமே எங்கள் ஈசா- வேலன் மூத்தவா அழைப்போர்கு அருள்பொங்கும் நேசா அமிர்தகளி தீர்த்தம் கொண்டாய் -அதில் அமிழ்வோர்கு நோய்தீர்கும் மருந்தாக நின்றாய் மலிவாகிப் போனேனே நானும்- உலகில் மலியாத உனதருள் எமக்கென்றும் வேணும்
மை மையல் கொண்டேன் உனைக்கண்டு- பார்து மார்மேலே கைதூக்கி வணங்கினேன் நிண்டு மின்னொளி கண்ணைப் பறிக்குது- உயர்ந்து மேவிய கோபுரம் அருளள்ளி தெறிக்குது மாமாங்கம் மாமாங்கம் என்றால்- அருள் மனமெல்லாம் புகுந்து மகிழ்விக்கும் நின்று
மெ மெல்ல அசைந்திடும் உன்னுருவம்- கண்டு மேனியில் நுடங்குகு என் கருவம் பொல்லாத வறுமையைப் போக்கு- தமிழர்கு இடர்தரும் கொடியோரை அடியோடு தாக்கு எல்லாமும் நீதானே அப்பா – எமக்கு இருந்தாலும் இழந்தாலும் நீதானே காப்பு
மே மேளங்கள் முழங்கிட திருவிழா- கோயில் மூலவர் வெளிவர அழகான பெருவிழா அமுதள்ளிப் படைத்திடும் முன்றல்- இரந்து அழுவோர்கு குறைதீர்கும் அருளான மன்றம் பிணிநீக்கும் சந்தணச் சேறு- அதில் பணிந்தெழு பழவினை உனைவிட்டு மாறும்
மொ மொழியெல்லாம் பொய்குதே எனக்கு -பொல்லா பழிவந்து சூழுதே பெருமையா உனக்கு விழிசெய்த பாவமோ என்ன- நான் விரும்பியும் கிடையாத வாழ்கைதான் அதிகம் எழில்கொஞ்சும் மாமாங்கக் கோயில் -வந்தால் எம்நிலை மாற்றிடும் கோபுர வாயில்

0 comments:

Post a Comment