ADS 468x60

08 August 2016

நினைக்க முடியாத பிரிவில்



என் இனத்தின் சாவைக்கூட
நினைக்க முடியாத பிரிவில்
நானும்!
கொத்துக் கொத்தாக உயிர்கள்
ஆகுதியான போது - அதில்
மகிழ்ந்து,
அதை
அரசியலாயும், வியாபாரமாயும்,
வெற்றியாயும் கொண்டாடும்
கூட்டத்தின் மத்தியில்,


குற்றம் சொல்ல
யாரையும் அறியாமல்,
குற்றுயுரான உள்ளங்களின்
இயலாமைகளுக்கு எனது
வார்த்தைகள்
ஒரு துளி நீரையாவது
அந்தக் குடும்பங்களின்
உயிர்புக்காய் உதவ
இறைவனை பிரார்த்தித்து
அனைத்து உயிர்களின் சாந்திக்காய்
இன்நாளை வணங்குகிறேன்!!!
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

0 comments:

Post a Comment