ADS 468x60

08 August 2016

அழகாய் வைத்துக் கொள்ளுவம்!

எதை எழுதலாம், ம்ம்ம் உலகத்தில் பல மனிதர்கள் பல மாதிரிப்பா. சிலர் சிரிக்கிறத, பேசிறத பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்புறம் நாம பேசமுடியாம இரசிக்க தொடங்கிடுவம்.

சிலபேர் சாப்பிடுறத பாத்துக்கொண்டே இருக்கலாம் சிலபேர் சாப்பிடுறத பாத்தால் 10 நாளைக்கு சாப்பிட முடியாது. 

சிறிய சம்பவம் ஒண்ணு,மகாத்மா காந்தி தாகூருடன் இருவருமாக ஒரு நாள் தங்கி இருந்தனராம். அப்போ அவர்கள் இருவரும் வோக்கிங் போக ரெடியானாங்க. இருவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து சிறிது நடந்த பிறகு, தாகூர் சொன்னாராம் ஒரு கணம் நில்லுங்க வந்துடுறன் என திரும்பவும் உள்ளே சென்றார், நேரம் போயிம் தாகூர் வெளியில் வரல்லயாம்.


கடுப்படைந்த காந்தி உள்ளே சென்று பார்த்தார் தாகூர் உள்தளே தலைசீவி அலங்கரித்துக்கொண்டிருந்தார். காந்தி கடும் கடுப்பாகி கேட்டார், வாக்கிங் போறத்துக்கு வேற அழகா போகனுமா என்று கேட்டாராம். அதற்கு தாகூர் சொன்னாராம், நான் அழகா போகனும் என்பதற்காக என்னை அலங்காித்துக் கொள்ளவில்லை மாறாக மற்றவர் கண்ணுக்கு நான் அசிங்கமாக படக்கூடாது, அப்படி மற்றவர் நம்மை பார்து அசிங்கப்படும்படி இருப்பது மகா பாவம் என்றாராம் பாருங்க. 

நமது நண்பர்கள் சிலரிடமும் பாா்கும் போது இப்படி தோணும் அவர்களது நடை, உடை, பாவனை மற்றும் கதை பேச்சி என்பன ஸ்வீற்றா இருந்தால் எவ்வளவு இதமாக இருக்கும் என... சிலர் போட்டோவை அப்லோட் பண்ணுறது கூட ஐயோ தாங்க முடியலங்க இடிச்ச புளிமாதிரி இருக்கிறாங்க.#வாயால #சிரியாதிங்க #மனதால #சிரியுங்கபா!!!! தாகூர் அழகின் உபாசகர்.

0 comments:

Post a Comment